பிரபல தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரியோ ராஜ். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
தனது வித்யாசமான, தனித்துவமான ஆங்கரிங் திறன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ரியோ, குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் அதிகம் கவனிக்க படுபவராக வளம் வருகிறார். விரைவில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக உள்ள இவர், தற்போது விஜய் டிவியில் 'ரெடி ஸ்டெடி போ' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
https://twitter.com/vijaytelevision/status/1080856311003316226
சம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 2 பெண்களிடையே போட்டி நடத்தப்பட்டது. குறிப்பிட்ட டாஸ்க் தன்னால் செய்ய முடியாது என கூற பின்னர் இருவரும் சண்டையிட்டு கொண்டனர். அதன் பிறகு டென்ஷனனான ரியோ ' யார் டா கோ-ஆர்டினேட்டர் ? என்ன டா இவர்களிடம் திட்டுவாங்க தான் சம்பளம் கொடுக்குறீங்களா? என மிகவும் கோபமாக கத்தும் காட்சி ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. ஆனால்,எப்படியும் வழக்கம் போல இது ஒரு டிஆர்பி ட்ரிக்காகத்தான் இருக்கும் என்று தான் எண்ணம் தோன்றுகிறது.


