பிரபல தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரியோ ராஜ். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
தனது வித்யாசமான, தனித்துவமான ஆங்கரிங் திறன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ரியோ, குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் அதிகம் கவனிக்க படுபவராக வளம் வருகிறார். விரைவில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக உள்ள இவர், தற்போது நடிகர் அஜித் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
நான் எப்போதிலிருந்து அஜித்தை ரசிக்க ஆரம்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எப்போது அஜித் படம் ரிலீஸ் ஆனாலும் , எனக்கு எந்த வேலை இருந்தாலும் முதல் நாள், முதல் ஷோ அவருடைய படத்தை அவருடைய ரசிகர் பட்டாளத்துடன் சென்று ஆரவாரமாக பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், என்னிடம் யாரேனும் அஜித்தை பிடிக்கவில்லை என்று கூறினால் அவர்களையும் அஜித் படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ கூட்டிச்செல்வேன். ரசிகர்களுடைய ஆரவாரத்தை பார்த்து அவர்களே பிரமித்து விடுவார்கள், என்று கூறியுள்ளார்.