தாய் தந்தையாரை பார்த்ததும் குழந்தை போல் அழுத ராபர்ட் மாஸ்டர் – பிக் பாஸுக்கு பின் அவர் வெளியிட்ட முதல் வீடியோ.

0
461
robert
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ராபர்ட் மாஸ்டர் பதிவிட்ட முதல் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 48 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 6 போட்டியாளர்கள் போக தற்போது 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி இருக்கின்றனர். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான். ராபர்ட் மாஸ்டர் பற்றி முகம் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதா விஷயத்தில் தான்.

ராபர்ட் மாஸ்டர் குறித்த தகவல்:

இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நடன இயக்குனராக கொடி கட்டி பறந்து இருந்தார். பின் இடையில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வராததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் இவர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதற்கு பின் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர்:

காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன் விளையாட்டில் கவனம் செலுத்தி இருந்தார். இதனால் இவரின் மீது பல விமர்ச்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. பின் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டர் ஸ்ட்ராங்கான போட்டியாளராக இறுதிவரை வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.

ராபர்ட் மாஸ்டர் பதிவிட்ட முதல் வீடியோ:

ஆனால், இவர் ரக்ஷிதா பின் சுற்றிக்கொண்டு செய்த சேட்டைகளால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்றிருக்கிறது. இதனாலே இவர் வெளியேறுவதற்கு காரணம் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ராபர்ட் மாஸ்டர் முதன்முதலாக வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியப் பிறகு ராபர்ட் மாஸ்டர் அவர்கள் அசல் கோளாறு முதலில் சந்தித்திருக்கிறார். பின் இத்தனை நாட்கள் ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி கூறி வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement