ஒதுக்கிய உறவினர்கள், சுயமாக படித்து டாக்டர், அறக்கட்டளை, ஆதரவற்ற பிள்ளைகளுக்கு அடைக்கலம் – ரோபோ ஷங்கர் மருமகனின் மறுபக்கம்.

0
367
karthi
- Advertisement -

நடிகர் ரோபோ சங்கரின் மருமகன் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார். அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பின் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம்.

- Advertisement -

ரோபோ ஷங்கர் மகள்:

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு இவர் தன்னுடைய முறை மாமனை திருமணம் செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்.

திருமண நிச்சயதார்த்த நிகழ்வு:

இவர் திருமணம் செய்யும் நபர் கார்த்திக். இவர் மதுரையில் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரோபோ சங்கரின் உறவினர் ஆவார். சமீபத்தில் தான் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். இதை அடுத்து சில வாரத்திற்கு முன்பே இவர்களுடைய திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது. பின் கடந்த வாரம் இந்திரஜா- கார்த்திக் திருமணம் மதுரையில் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இந்திரஜா திருமணம்:

சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலருமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். திருமண வரவேற்பு விழா சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேலும், மதுரையில் தனது மகளுக்கும் மருமகனுக்கும் தடபுடலாக கரி விருந்து வைத்து அசத்தியுள்ளார் ரோபோ ஷங்கர். இந்த நிலையில் ரோபோ ஷங்கரின் மருமகன் கார்த்திக் குறித்த சுவாரசியமான தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, பிரியங்காவின் சொந்த தம்பி தான் கார்த்திக் என்று கூறப்பட்டது. இதை பிரியங்காவே கூறி இருந்தார். ஆனால், உண்மையில் அவர் சொந்த தம்பியே கிடையாது.

ரோபோ சங்கர் மருமகன் குறித்த தகவல்:

பிரியங்கா தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர் தான் கார்த்தி. இவர் சிறு வயதாக இருக்கும் போதே இவருடைய தந்தை இறந்து விட்டார். சொந்த பந்தங்கள் கைவிட்ட பிறகு இவர் தன்னுடைய தாயுடன் ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்தார். தற்போது கார்த்திக் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் அவர் நிறைய பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சொந்தமாகவே பெரிய வீடு ஒன்று கட்டி இருக்கிறார். மேலும், இது தொடர்பாக பேட்டியில் கார்த்தி, நான் பிரியங்காவின் சொந்த தம்பி கிடையாது. எங்களுடைய தொண்டு நிறுவனத்தில் ரோபோ சங்கர் மாமா- பிரியங்கா அக்கா உறுப்பினர்கள். அப்போதுதான் அவங்களுடைய அறிமுகம் கிடைத்தது, நான் எப்படி குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கின்றனோ அதே போன்று தான் என்னை தம்பியாக பிரியங்கா அக்கா தத்து எடுத்துக் கொண்டார். என்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பிரியங்கா அக்கா உடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது என்று உணர்ச்சிபூர்வமாக பேசி இருந்தார்.

Advertisement