ரஜினி நிஜத்திலும் நல்ல நடிகர் தான் – சந்திரபாபுவுடன் ரஜினி செய்த பழைய விஷயத்தை எல்லாம் தோண்டி எடுத்த ரோஜா.

0
640
Rajini
- Advertisement -

சந்திரபாபு குறித்து ரஜினி மேடையில் பெருமையாக பேசிய நிலையில் நடிகை ரோஜா , ரஜினியை விமர்சித்து உள்ளது ரஜினி ரசிகர்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயவாடாவில் நடைபெற்றது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் மகன் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டனர். மேலும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்த விழாவில் பேசிய அவர் ‘ந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வைகொண்ட அரசியல் தலைவர். அவரது தொலைநோக்கு பார்வையால், ஐதராபாத் இப்போது ஹைடெக் நகராக மாறியுள்ளது. ஐதராபாத், நியூயார்க் போன்று வளர்ந்துள்ளது’ என்று பேசி இருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு ஆந்திராவில் உள்ள மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஜெகன் மோகன் கட்சியினர் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜாவும் ரஜினியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் ‘ரஜினிகாந்த் பேச்சை கேட்டால் தனக்கு சிரிப்பு தான் வருகிறது. 003ஆம் ஆண்டுடன் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. 20 ஆண்டுகளாக ஹைதராபாத் நகரை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடுவால் அந்த நகரம் எப்படி வளர்ச்சி பெற்றிருக்கும். ரஜினிகாந்து தெரிந்து தான் பேசினாரா இல்லை சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை பார்த்து படித்தாரா என தெரியவில்லை என்றும் பேசி இருந்தார்.

ரோஜாவின் இந்த பேச்சை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் பலரும் ysr கட்சியினரையும் ரோஜாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: – என்.டி.ஆர் 100வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அவருடைய கருத்துகள், அனுபவம் ஆகியவற்றை தெரிவித்து பேசினார்.ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது சகித்து கொள்ள இயலாத வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி மட்டமாக விமர்சித்துள்ளனர்.

-விளம்பரம்-

சமூகத்தில் மிகவும் கௌரவமான நிலையில் இருக்கும் ரஜினிகாந்தை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ள விதம் அனைவருக்கும் வேதனை ஏற்படுத்தி உள்ளது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அரசின் மீது அவர் எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. அந்த கட்சியை சேர்ந்த யாரையும் குறிப்பிட்டு அன்று அவர் பேசவில்லை. பல விஷயங்களில் தன்னுடைய அனுபவம், அபிப்பிராயம் ஆகிவற்றை மட்டுமே அவர் தெரிவித்து பேசினார்.

இது போன்ற தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். விமர்சித்தவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள். வாய் கொழுப்பு எடுத்து பேசும் தன்னுடைய கட்சி தலைவர்களை ஜெகன்மோகன் ரெட்டி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் நடைபெற்ற தவறுக்கு மன்னிப்பு கேட்டு தவறை சரி செய்து கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் சந்திரபாபு நாயுடுவின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்திருக்கும் ரோஜா சந்திரபாபு நாயுடு மற்றும் ரஜினி இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து. அப்போது ஏன் இதே ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடு என் டி ஆர்ஐ முதுகில் குத்திய போது அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார். அனைத்தையும் செய்து விட்டு தற்போது அவரையே புகழ்கிறார் எனவே ரஜினிகாந்த் திரையில் மட்டுமல்ல நெகத்திலும் ஒரு சிறந்த நடிகர் தான்.

Advertisement