கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி மாற்றுத்திறனாளிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை – இப்போ தெரியுதா இவங்கள ஏன் மக்கள் தேர்ந்தெடுத்தாங்கனு

0
621
- Advertisement -

மாற்றுத்திறனாளிக்காக நடிகை ரோஜா செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைவருடம் வருடம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரியாணி தான். அதற்கு பிறகு தான் பள்ளி விடுமுறை என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

பின் ஜிங்கிங் பெல் பாடல்,கேக் என்று பல விஷயங்கள் நினைவுக்கு வரும். முக்கியமாக சாண்டா கிளாசை பலரும் நினைத்து பரிசுத்தர தாத்தா வருவார் என்று குழந்தைகள் நம்புவார்கள். இப்படி இருக்கும் நிலையில் சாண்டா கிளாஸ் ஆக மாறி நடிகை ரோஜா செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது செருப்பு தைக்கும் தொழிலாளி நாகராஜ். இவர் மேரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

சாண்டா கிளாஸ் ஆக மாறிய ரோஜா:

இவர்களுக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. சமீபத்தில் தான் மேரிக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்தது. தற்போது மேரி உடல்நிலை முடியாமல் படுத்த படுக்கையாகவே இருக்கிறார். இதனால் இரண்டு சின்ன பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு படிக்க வைக்க முடியாமலும், மனைவியுடைய மருத்துவ செலவுக்கு காசு இல்லாமல் நாகராஜ் ரொம்பவே கஷ்டப்பட்டு வருகிறார். இதை அறிந்த நடிகை ரோஜா அவர்கள் நாகராஜ் வீட்டிற்கு சாண்டா கிளாஸ் ஆக சென்று இருக்கிறார்.

குவியும் பாராட்டு:

பின் ரோஜா அவர்களுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவருடைய குடும்பத்திற்கு இரண்டு லட்சம் காசோலையும் வழங்கி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து பலருமே ரோஜாவின் செயலை பாராட்டி லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள். தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா.

-விளம்பரம்-

ரோஜா திரைப்பயணம்:

இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சி பிடி நடன கலைஞராக தான் இருந்தார். பின் 1991 ஆம் ஆண்டு பிரேம தப்பாஸு என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் இவர் நடிகையானார். அதற்கு பின் தான் இவர் தமிழில் செம்பருத்தி படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார் என்று பல நடிகர்களின் படங்களிலும் நடித்து இருந்தார்

ரோஜா அரசியல்:

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணசித்திர வேடங்களில் நடித்து இருந்தார். பின் சில ஆண்டு காலாகவே ரோஜா நடிப்பதை சில விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. ரோஜா அந்த பகுதி மக்களின் கல்வி,மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார். தற்போது ரோஜா அவர்கள் ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

Advertisement