நான் ஒரு மணி நேரத்துக்கே இங்க இத்தனை லட்சம் வாங்குறேன் – லீக்கான ரவுடி பேபி, இலக்கியாவின் விபச்சார பேரம்.

0
69288
surya
- Advertisement -

சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆபாச வீடியோகளை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமடைந்த ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமியின் யூடுயூப் பக்கத்தை முடுக்க வேண்டும் என்று நீதி மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சமூக வலைதளமான டிக் டாக் மூலம் பலர் பிரபலமாகி இருந்தார்கள். அந்த வகையில் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் டிக் டாக் சூர்யா. இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக்டாக்கில் இவர் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்து கொண்டார்.

-விளம்பரம்-

இவர் டிக்டாக்கில் இருந்தபோது இவர் மீது பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூட வைத்திருந்தார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் செய்ததாக திருச்சி மாநகர காவல் துறையினரால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால், தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்றும் தனக்கும் அந்த ஸ்பாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி இருந்தார் சூர்யா. இருப்பினும் டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இவர் யூடுயூபில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் யூடுயுபில் இவர் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக சமீபத்தில் புகார் எழுந்ததை தொடர்ந்து திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி, ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சரி, இது மட்டும் தான் செய்கிறார் என்றால் சமீபத்தில் ரவுடி பேபி சூர்யா, வேலை வாங்கி தருவதாக பெண்களை சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்த வருவதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் ரவுடி பேபி சூர்யாவை போல டிக் டாக்கில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்த இலக்கியம் ரவுடி பேபி சூர்யா சிங்கப்பூரில் பாலியல் தொழில் செய்வதற்கு அழைப்பு விடுக்கும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த ஆடியோவில் இலக்கிய பாலியல் தொழிலுக்கு சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாக கூறும் ரவுடி பேபி சூர்யா இரண்டு மாதத்திற்கு பல லட்சங்கள் கிடைக்கும் என்றும் கூறுகிறார். ஆனால், டிக் டாக் இலக்கியா நான் இங்கேயே இரண்டு மணி நேரம் இருப்பதற்கு இரண்டு லட்சம் வாங்குகிறேன் என்று பேரம் பேசுகிறார்.

-விளம்பரம்-

மேலும் ஒருவேளை சிங்கப்பூர் சென்று கஸ்டமர் வரவில்லை என்றால் பணம் கொடுக்க மாட்டார்களா என்று இலக்கியா கேட்க அப்படி எல்லாம் கிடையாது கஸ்டமர் வந்தாலும் வராவிட்டாலும் உனக்கு பணம் வந்துவிடும், நீ என்னுடைய கண்ட்ரோலில் தான் இருப்பாய் என்றும் கூறுகிறார் ரவுடி பேபி சூர்யா.இதன்மூலம் ரவுடி பேபி சூர்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.

Tik Tok Elakkiya Archives - Tamil Behind Talkies

சூர்யாவிற்கு எதிராக இத்தனை ஆதாரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை அதேபோல நீதிமன்றம் சூர்யாவின் யூட்யூப் பக்கத்தை முடக்க உத்தரவிட்ட பிறகும் இன்னமும் அவரது யூடியூப் சேனல் இயங்கிக் கொண்டுதான் வருகிறது அவரும் தொடர்ந்து வீடியோ போட்டுக்கொண்டுதான் இருக்கிறார் கூடிய விரைவில் சூர்யா மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement