வாலி இந்தி ரீமேக் வழக்கு – எஸ். ஜே சூர்யா. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.

0
1165
- Advertisement -

வாலி படத்தின் இந்தி ரீமேக் தொடர்பான வழக்கில் எஸ் ஜே சூர்யாவிடம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். அதற்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் அஜித்தை வைத்து வாலி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் எஸ் ஜே சூர்யாவுக்கு மட்டும் இல்லாமல் அஜித்திற்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. மேலும், இந்த படத்தின் இந்தி உரிமையை போனி கபூர் பெற்றிருந்தார். இதை எதிர்த்து எஸ் ஜே சூர்யா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -

வாலி படத்தின் சர்ச்சை:

பின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வாலி படத்தின் கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ் ஜே சூர்யா தாக்கல் செய்யவில்லை. இதனால் படத்தின் காப்பி உரிமை படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் என்று கூறி வாலி படத்தின் இந்தி ரீமேக்கை துவங்க அனுமதி கொடுத்திருந்தது. மேலும், வாலி படம் தொடர்பான வழக்கில் எஸ் ஜே சூர்யாவின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது.

உயர் நீதிமன்றம் உத்தரவு:

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ் ஜே சூர்யா நேரில் ஆஜராகி 2:30 மணி நேரம் சாட்சியத்தை அளித்திருக்கிறார். ஆனால், குறுக்கு விசாரணை முழுமை அடையாததால் இந்த வழக்கை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ். ஜே. சூர்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதை அடுத்து உயர் நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டதால் எஸ் ஜே சூர்யாவிடம் குறுக்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

எஸ் ஜே சூர்யா திரைப்பயணம்;

சமீப காலமாக எஸ் ஜே சூர்யா அவர்கள் வில்லனாக நடித்து மிரட்டி வருகிறார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பின் இவர் ஹீரோவாக நடித்து இருந்த மான்ஸ்டர் படம் மிக பெரிய அளவில் பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது.

மார்க் ஆண்டனி படம்:

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை வினோத் மார்க் தயாரித்திருக்கிறார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விஷால், செல்வராகவன், அபிநயா, ரிது வர்மா, நிழல்கள் சூர்யா, Y.G. மகேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். டைம் டிராவல் கான்செப்டில் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல இந்த பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது

Advertisement