ஜி தொலைக்காட்சியில் பாட்டு பாடி அசத்தும் 66 வயதான ராக்ஸ்டார் ரமணியம்மா, இனிமேல் தன்னை வேறு எங்கும் பார்க்க முடியாது என பேசியுள்ளார் இதனால் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஜி தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரும் பிரபலம் அடைந்தவர் ராக்ஸ்டார் ரமணியம்மா. சமீபத்தில் இவரை சிங்கப்பூர் அழைத்துசென்ற அந்த பிரபல நிறுவனம் அங்கு கச்சேரி வைத்து மேடையில் அவரை பேச வைத்துள்ளது.
மேடையில் பேசிய ராமணியம்மா..
எனக்கு இதுவரை கிடைத்த புகழ் போதும். இந்த சேனல் எனக்கு நிறைய செய்துவிட்டது. நான் எதிர்பார்க்காத புகழ் இந்த சேனலால் தான் எனக்கு வந்தது. இதனால் இனிமேல் வேறு எந்த சேனலுக்கும் நான் போகமாட்டேன்.
என்னை இனி வேறு எந்த சேனலிலும் பார்க்க முடியாது என நெஞ்சை உருக வைக்கும் விதம் பேசினார். இதனால் இனிமேல் இவரை வேறு எங்கும் பார்க்க முடியாது என இவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.