என்னை ஜெயில்ல போட்டா கைதுகளுக்கு பிரச்சனை – சாமர்த்தியமாக பேசி ஜாமீன் வாங்கிய சாப்பாட்டு ராமன்.

0
3535
saapattu
- Advertisement -

யூடியூபில் எத்தனையோ பிரபலமான நபர்கள் இருக்கின்றனர். சாப்பாட்டிற்கு என்று பல்வேறு யூடியூப் சேனல்கள் இருந்தாலும் வண்டி வண்டியாக சாப்பிட்டு அதன் மூலம் பிரபலமானவர் யூடியூப் பிரபலமான சாப்பாட்டு ராமன் என்று அழைக்கப்படும் சித்த மருத்துவர் பொற்செழியன். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் உள்ள கிராமத்தில் ஐயப்பன் என்ற பெயரில் சித்தா கிளினிக் நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக இவர் சாப்பாடு ஜீரணமாகும் டானிக் ஒன்றைக் கூட தானே உற்பத்தி செய்து அதனை ஆன்லைன் மூலம் விற்பனையும் செய்து வருகிறார். அதன் மூலம் பல லட்சத்தை சம்பாதித்தார்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களாக இவர் எந்த ஒரு சாப்பாட்டு வீடியோவையும் போடவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் ஏன் வீடியோ போடவில்லை என்று விளக்கம் சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த வீடியோவில் தற்போது கொரோனாவால்பாதித்து கொண்டிருக்கையில் நான் மட்டும் சாப்பிட்டு கொண்டு இருந்தால் நன்றாக இருக்காது அதனால்தான் இத்தனை நாட்களாக வீடியோ போடவில்லை என்று கூறி இருந்தார் சாப்பாட்டு ராமன். ஆனால், இந்த வீடியோ தான் தற்போது இவரை கைது செய்யும் அளவிற்கு வந்துள்ளது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமே இந்த வீடியோவில் இவர்கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள சில டிப்ஸ்களை வழங்கியிருந்தார். அது பொதுவான டிப்ஸ் ஆகத்தான் இருந்தது என்றாலும்சித்தா மருத்துவரான இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து இவரது சிகிச்சை மையத்திற்கு போலீசார் விசாரணைக்காக சென்றபோது அங்கே இவர் ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது தெரியவந்தது. மேலும், இவரது சிகிச்சை மையத்தில் சில ஆங்கில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது. சித்தா படிப்பை முடித்த இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இவர் போலீசாரால் போலி மருத்துவம் பார்த்த குற்றத்திற்காக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாப்பாடு ராமன், நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டு, வீட்டில் தனிமையில் இருந்து தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தன்னை சிறையில் அடைத்தால் என் மூலமாக அங்குள்ளவர்களுக்கு தோற்று பாதித்து விடக் கூடும் என்பதால் தனக்கு ஜாமின் அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரை ஜாமீனில் வீட்டிற்கு அனுப்பி வைத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். சாமர்த்தியமாக வாயால் சாப்பிட்டு பிரபலமானது மட்டுமல்லாமல் சாமர்த்தியமாகப் பேசி வாயால் ஜாமீன் வாங்கியிருக்கிறார் சாப்பாட்டு ராமன்.

-விளம்பரம்-
Advertisement