பார்த்திபனின் சபாஷ் படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா? அவரின் தற்போதைய நிலை.

0
86624
Divya-Unni
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த திவ்யா அவர்களுக்கு வளைகாப்பு விழா சமீபத்தில் நடந்தது. மேலும், இவர் வளைகாப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். நடிகை திவ்யா அவர்கள் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதுமட்டும் இல்லாமல் நடிகை திவ்யா அவர்கள் ஒரு சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். அதுமட்டும் இல்லாமல் நடிகை திவ்யா அவர்கள் பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் உட்பட்ட பல்வேறு நடனங்களை கற்று உள்ளார். மேலும், தன் நடனத்துக்காக பல விருதுகளையும் பெற்று உள்ளார். இவர் மலையாள மொழி மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானர். இவர் தமிழில் வேதம், பாளையத்தம்மன், சபாஷ், கண்ணன் வருவான் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், நடிகை திவ்யா அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சுதிர் சேகர் என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
முதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் திவ்யா உன்னி

பின் அவர் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி விட்டார். மேலும், இவர்களுக்கு அர்ஜுன் மற்றும் மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடனத்தின் மீது திவ்யாவுக்கு அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் அமெரிக்காவில் நடன பள்ளி திறக்க வேண்டும் என முடிவு செய்து வந்தார். ஆனால், இவருடைய கணவன் சுதிர் குழந்தையும் மட்டும் பார்த்துக் கொள் இதெல்லாம் தேவை என்று கூறினார். பின் இவர்கள் இருவருக்கும் பெரிய கருத்து வேறுபாடு பயங்கரமாக ஏற்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டு நடிகை திவ்யா தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதோடு தன் பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நடிகை திவ்யா அவர்கள் மும்பையை சேர்ந்த கேரள இளைஞர் அருண் குமார் என்பவரை குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : திருமண நாள் முடிந்து ஒரு மாசதுக்குள்ள இப்படி ஒரு விசேஷமா. அட்லீ மனைவிக்கு குவியும் வாழ்த்துக்கள்

- Advertisement -

இவர் அமெரிக்காவில் என்ஜினியராக ஹூஸ்டனில் வேலை பார்த்து வருகிறார். மீண்டும் நடிகை திவ்யா அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை திவ்யா ஹூஸ்டன் நகரில் ஸ்ரீ படம் ஸ்க்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். மேலும், அவர் தான் கற்றுக் கொண்ட பல்வேறு நடனங்களையும் அவர்களுக்கு சொல்லி தருகிறார். தற்போது நடிகை திவ்யா அவர்கள் மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். மேலும்,அவருக்கு அமெரிக்காவிலேயே வளைகாப்பு விழா நடந்து உள்ளது. இந்த விழாவில் அவருடைய அம்மா, மகன், மகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Actress Divya Unni and Arun expecting their first child

-விளம்பரம்-
இரண்டாம் கணவருடன் சமீபத்தில் நடைபெற்ற வளைகாப்பு

அதோடு வளைகாப்பு விழா போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நடிகை திவ்யா பதிவிட்டு இது ஒரு அற்புதமான உணர்வு என்றும் தெரிவித்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு சுகப் பிரசவம் ஆகட்டும் என்றும் வாழ்த்தி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் முதல் திருமணம் தான் தோல்வியில் முடிந்தது. இதில் அவர் சந்தோஷமாக நிலைத்து நிற்கட்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement