12 மணி நேரம் அங்க தான் இருப்பேன், 4 வருடம் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு – கண்ணீர் விட்டு கதறிய சதா.

0
1140
Sadha
- Advertisement -

சம்பாதித்த மொத்த பணமும் வீணா போச்சு என்று நடிகை சதா கண்ணீர் விட்டு அழுது பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சதா. இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக சதா அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரால் முன்னணி நடிகையாக தொடர முடியவில்லை. அதோடு பல புது முக நாயகிகளின் வருகையால் சதா பட வாய்ப்பை இழந்தார். சதா கடைசியாக வடிவேலு நடித்த ‘எலி ‘ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

- Advertisement -

சதாவின் திரைப்பயணம்:

அந்த படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு இடையில் எதிர் பார்த்த அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததால் சதா அவர்கள் தி ஜூனியர்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்றார். ஆனால், அங்கும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் சதா ரீ-என்ட்ரி கொடுத்தார். இறுதியாக நடிகை சதா வர்கள் இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார்.

சதா நடித்த கடைசி படம்:

தன்னுடைய கணவனை காப்பாற்ற மனைவி பாலியல் தொழிலாளியாக மாறுகிறார். குணமாகி வந்த கணவர் தன்னுடைய மனைவியை ஏற்க மறுக்கிறார். பின் அவர் தன்னுடைய கணவரையே கொலை செய்து விடுகிறார். அதற்கு பிறகு அவர் என்ன ஆனார்? என்பதே படத்தின் கதை. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் படம் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இதற்குப் பிறகு சதாவிற்கு பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது.

-விளம்பரம்-

சதா நடத்தி வரும் ஹோட்டல்:

இதனால் இவர் தன்னுடைய திரையுலகில் சம்பாதித்த மொத்த பணத்தையும் பிசினஸில் போட்டார். இவர் மும்பையில் ஹோட்டல் ஒன்றை துவங்கி இருக்கிறார். அந்த ஹோட்டலுக்கு எர்த்லிங்ஸ் கபே என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ஹோட்டல் நான்கு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஓட்டல் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் சதா இந்த ஹோட்டலில் தான் இருக்கிறாராம். தன்னுடைய வியாபாரத்தையும் பார்த்துக் கொள்கிறார்.

சதா வெளியிட்ட வீடியோ:

இந்த நிலையில் சதாவின் ஹோட்டலுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, எர்த்லிங்ஸ் கபே என்ற பெயரில் இயங்கி வரும் ஹோட்டல் இடத்தினுடைய உரிமையாளர் இடத்தை காலி செய்ய சொல்லி இருக்கிறார். இதனால் இடத்தின் உரிமையாளரிடம் சதா எவ்வளவோ பேசி போராடி இருக்கிறார். ஆனால், அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மனமுடைந்த சதா இது தொடர்பாக வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சதாவிற்கு ஆறுதலாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement