காஷ்மீர் பண்டிட்டி, ஜெய் ஸ்ரீராம் கோஷம், இஸ்லாமியருக்கு நடந்த தவறு – படு தைரியமாக பேசிய சாய்பல்லவி. குவியும் பாராட்டும் கண்டனமும்.

0
510
saipallavi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் சாய்பல்லவி. அதன்பின் இவர் மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். மேலும், இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தாலும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி தான் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க வந்தார்.

-விளம்பரம்-

தமிழில் கஸ்தூரி மான் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார் சாய் பல்லவி. பின் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சாய் பல்லவி. அதன் பின்னர் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். இறுதியாக இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘என் ஜி கே’ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஷ்யாம் சிங்கா ராய் படம்:

சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பல படங்களில் சாய் பல்லவி கமிட்டாகி இருக்கிறார்.

சாய்பல்லவி நடிக்கும் படம்:

அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் வெளியாகி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான புகைப்படம் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

சாய்பல்லவி நடித்து இருக்கும் படம்:

இதனிடையே சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து விராட பருவம் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நடித்த இந்த படம் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய்பல்லவி மற்றும் படக்குழுவினர் இறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் கொலை செய்யப்படுவதாக காட்டி இருப்பார்கள்.

இஸ்லாமியர் குறித்து சாய்பல்லவி கூறியது:

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், கொரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவரை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்று தான். இரண்டுமே தவறு தான் என்று கூறியிருந்தார். இப்படி சாய்பல்லவி அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement