எனக்கு சம்பளம் வேண்டாம் அதை வைத்து படம் எடுங்கள் – சாய் பல்லவியின் பறந்த மனது, குவியும் பாராட்டுக்கள்

0
616
saipallavi
- Advertisement -

எனக்கு சம்பளம் வேண்டாம், அதை வைத்து படமெடுங்கள் என்று சாய்பல்லவி கூறியிருக்கும் தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-
saipallavi

பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சாய் பல்லவி. பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

விரத பர்வம் படம்:

சமீபத்தில் சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் ஆக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் சாய்பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள்.

கார்கி படம்:

இதனை அடுத்து தற்போது சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கார்கி. இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், ஐஸ்வர்யா, லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து தயாரிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

சாய்பல்லவி படம் தேர்ந்தெடுக்கும் முறை:

இந்த நிலையில் இந்த படத்தை சாய் பல்லவி தேர்ந்தெடுத்தது குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீப காலமாக சாய் பல்லவி அவர்கள் தனித்துவமான படங்களிலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் முதலில் படத்தின் திரைக்கதையை ஜிமெயில் மூலம் அனுப்ப சொல்லுவார். அதை படித்த பிறகு கதை பிடித்து இருந்தால் அடுத்த கட்ட பேச்சு நடத்தி ஒப்பந்தம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

கார்கி படம் குறித்த ஸ்பெசல் தகவல்:

அதே போன்று தான் கார்கி படத்தின் கதையையும் சாய்பல்லவி இமெயிலில் வாங்கி படித்து இருக்கிறார். அவருக்கு கதை பிடித்துப்போகவே தனக்கு சம்பளம் இப்போது தர வேண்டாம். அந்த பணத்தை படம் எடுப்பதற்கு முதலீடாக வைத்து கொள்ளுங்கள் என்று சொன்னதாக படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. படத்திற்காக முன் பணம் கூட வேண்டாம் அதை வைத்து படம் எடுங்கள் என்று சாய்பல்லவி கூறி இருந்தது திரைப்பிரபலங்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

Advertisement