சாய்னா நேவால் விவகாரம் – காவல்நிலையத்தில் ஆஜராகி சித்தார்த் என்ன சொல்லியுள்ளார் பாருங்க (தேவை தானா இதெல்லாம்)

0
456
siddharth
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த் அடிக்கடி பல சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கருத்துகளை கூறி பலமுறை பல சிக்கலில் சிக்கி உள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பதிவிட்ட பதிவு போலீஸ் நிலையம் வரை சென்று விட்டது.

-விளம்பரம்-

அப்படி என்ன நடந்தது என்றால், பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பாதியிலேயே திரும்பினார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பல்வேரு தரப்பில் இருந்து பஞ்சாப் அரசிற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் சாய்னா நேவாலும் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். இதை பார்த்த நடிகர் சித்தார்த் அவர்கள் ட்விட்டரில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

சித்தார்த் போட்ட ட்விட்:

அதில் அவர், உலகின் நுட்பமான சேவல் சாம்பியன் கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா என்று பதிலளித்திருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், சித்தார்த் அளித்த பதிவிற்கு தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தார்த் மீது புகார் அளித்தது. இதனால் தன்னுடைய பதிவிற்கு சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சித்தார்த் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்:

அதில், நான் பதிந்த முரட்டுத்தனமான ஜோக்குக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களிடமிருந்து பல்வேறு கருத்துகளிலும் வேறுபட்டிருக்கலாம். உங்கள் ட்வீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நான் இதைவிட இரக்கம் கொண்டவனே. நான் நகைச்சுவை என கருதி அந்த ட்வீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன்.

-விளம்பரம்-

நடிகர் சித்தார்த்தின் மன்னிப்பு கடிதம்:

அதே வேளையில் நான் வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த நகைச்சுவை என்னைச் சாடுவோர் கூறுவதுபோல் மலினமான நோக்கம் கொண்டது அல்ல. நான் உண்மையிலேயே பெண்ணியவாதிகளின் ஆதரவாளர். ஒரு பெண் என்பதால் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ட்வீட்டை நான் பதிவு செய்யவில்லை. நீங்கள் எப்போதுமே எனது சாம்பியன் தான். நேர்மையுடன் எப்போதுமே என்று பதிவிட்டு இருந்தார். சித்தார்த்தின் இந்த மன்னிப்பு கடிதம் பார்த்து சாய்னாவும் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் அவரை ஆசீர்வதிப்பார் என்று கூறி இருந்தார். இருந்தும் சித்தார்த்தின் சர்ச்சை கருத்திற்கு தற்போது வரை பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

காவல் நிலையத்தில் மன்னிப்பு கேட்ட சித்தார்த்:

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த்தின் டீவ்ட்டை கண்டித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தை முடக்குமாறு கேட்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி நடிகர் சித்தார்த் காவல் நிலையத்தில் காணொளி மூலம் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கிறார். அப்போது அவர் தன்னுடைய தரக்குறைவான கருத்துக்கு சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை தகவலை சென்னை பெருநகர காவல்துறை அறிவித்து உள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement