இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் மேக்கப் இல்லா புகைப்படம்.

0
11714
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு வரவில்லை.

-விளம்பரம்-
Samantha Akkineni slays no makeup look in this stunning photo; Check it out

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் விதவிதமான உடையை அணிந்து கொண்டு செல்வேன். அந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு என்னை பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B9LkQF9h7zp/

இருப்பினும் அம்மணி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களைஅடிக்கடி வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் நடிகை சமந்தா துளியும் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தில் சமந்தா மேக்கப் இல்லாமலும் படு அழகாக இருப்பதை கண்டு பலரும் வியப்படைந்து இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டும் தான் நடிப்பேன் என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். ஏனென்றால் எனக்கு ஒரு குடும்பம் இருப்பதால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement