தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகை சமந்தா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
https://www.youtube.com/watch?v=UKxiKU5XgQg
கடந்த சில மாதங்களாக சமந்தாவின் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது. மேலும், சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்று கூட சர்ச்சியாகள் எழுந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சமந்தா திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
வி ஐ பி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த சமந்தாவை சுற்றி வளைத்து பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர். ஆனால், அது எதர்க்கும் பதில் அளிக்காமல் சென்றார் சமந்தா. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் விவாகரத்து சர்ச்சை குறித்து கேட்டதால் கடுப்பான சமந்தா, 'கோவிலுக்கு வந்திருக்கிறேன், புத்தி இல்லை?' என்று கடுப்பாகி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமந்தா, திருப்பதியில் இப்படி கடுப்பாகி இருப்பது முதன் முறையல்ல. இவர் நடிப்பில் வெளியான ஓ பேபி திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்து. ஆனால், இந்த படம் வெளியாகும் முன்பாக இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று திருப்பதி கோவிலில் பாத யாத்திரை செய்து இருந்தார். சமந்தாவை திருப்பதி மலையில் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கண்டனர்.
மேலும், ஒரு சில சமந்தாவை பின் தொடர்ந்து போட்டோ எடுத்தனர். அப்படி ரசிகர் ஒருவர் சமந்தாவை பின் தொடர்ந்து வீடியோ எடுத்தார். இதனால் கடுப்பான சமந்தா 'நடந்தா ஒழுங்கா நட, இந்த போட்டோ கீட்டோ எடுக்கற வேல எல்லாம் வெச்சிக்காத' என்று கூறி அந்த ரசிகரை எச்சரித்தார். அந்த வீடியோவும் அப்போது வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.





