கொழுந்துவிட்டு எரியம் விவாகரத்து சர்ச்சை – முதன் முறையாக மௌனம் கலைத்த சமந்தா. வைரலாகும் வீடியோ.

0
30996
samantha
- Advertisement -

சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் சமந்தா, நாக சைதன்யா குறித்த விவாகரத்து செய்திகள் தான் பயங்கரமாக பரவி வந்து கொண்டிருக்கின்றது. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா உலகிலுமே இவர்களைப் பற்றிய செய்திகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன என்று சொல்லலாம். தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் சமந்தாவும், நாக சைதன்யாவும் ஒருவர். ஆவார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், சமீப காலமாகவே சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிக்கிறார்கள். கூடிய விரைவில் இவர்கள் விவாகரத்து பெறுகிறார்கள் என்ற பல சர்ச்சைகளும், வதந்திகளும் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. அதற்கேற்றவாறு அவர்களுடைய சூழ்நிலையும் அமைகின்றது. சமீபத்தில் நடிகை சமந்தா ட்விட்டர் பக்கத்தில் தன் பெயரை S என்று மாற்றினார்.

இதையும் பாருங்க : பெண்களை மறுவாழ்வு மையமாகவும், சீர் திருத்த நிலையங்கலாகாவும் காட்டிய 8 படங்கள்.

- Advertisement -

அதில் இருந்து தான் சமந்தாவின் விவாகரத்து பற்றிய பல்வேறு விதமான வதந்திகள் கிளம்பியது. ஹைதராபாத்தில் நாகர்ஜுனா குடும்பத்தினர் நடிகர் ஆமீர் கானுக்கு விருந்து அளித்தனர். அதில் கூட சமந்தா கலந்துகொள்ளவில்லை. இதனால் சமந்தா விவாகரத்து உறுதியாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் படு வைரலாக கிசுகிசுக்கள் பரவியது.

இந்த நிலையில் முதன் முறையாக அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமந்தா. சமீபத்தில் நடிகை சமந்தா மும்பையில் வீடு வாங்கி இருப்பதாகவும் இதனால் அவர் கணவரை பிரிந்து ஹைதராபாத்தில் இருந்து வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் லைவ்வில் கேட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த சமந்தா, எப்படி இது போன்ற வதந்திகள் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. இதுபோன்ற 100 வதந்திகள் இருக்கிறது. ஆனால், எதுவும் உண்மை இல்லை. ஐதராபாத் தான் எனது வீடு. எப்போதும் எனக்கு ஹைதராபாத் தான் வீடாக இருக்கும். ஹைதராபாத் தான் ஒவ்வொன்றையும் எனக்கு வழங்கியது. நான் இங்கேயே தான் வசிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement