சமந்தா கொஞ்சி விளையாடும் இந்த இரட்டைக் குழந்தைகள் நயன்தாராவின் குழந்தைகள் என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால் உண்மையில் இது பிரபல பின்னணி பாடகியான சினமயின் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாஸ்கோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான். மேலும், இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார்.
#Samantha With #Chinmayi Kids pic.twitter.com/B8rqivOy2X
— chettyrajubhai (@chettyrajubhai) August 7, 2023
ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. மேலும், இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார்.அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். . இப்படி ஒரு நிலையில் ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது.
இப்படி ஒரு நிலையில் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் தான் நடிகை சமந்தா சின்மயி குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை சமந்தாவும் பாடகி சின்மையும் மிகவும் நெருங்கிய தோழிகள் என்பது பலரும் அறிந்த விஷயம் தான் ஆரம்ப காலத்தில் நடிகை சமந்தாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் கொடுத்தது சின்மயி தான்.
அதேபோல சின்மயின் கணவரான ராகுல் ஒரு சில படங்கள் நாயகனாக நடித்திருக்கிறார் அந்த வகையில் ராகுல் மற்றும் சந்தா இருவரும் மாஸ்கோவின் காவிரி படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா சமீப காலமாக மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் விஜய் தேவர்கொண்டாவிடமிருந்து 25 கோடி கடன் வாங்கியதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்த சமந்தா ‘மயோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? தவறான தகவலை உங்களுக்கு கொடுத்துள்ளனர். அதில் ஒரு சிறிய தொகையை நான் எனக்காக செலவு செய்ததில் மகிழ்ச்சியே. என் சிகிச்சைக்காக நான் மற்றவர்களிடம் பணம் பெறவில்லை. என்னுடைய துறையில் நான் என் வேலைகள் மூலம் அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். நன்றி.
மயோசிடிஸ் என்பது ஒரு நிலை. அதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள்’ என்று பதிவிட்டு இருந்தார். தற்போது படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி இருக்கும் சமந்தா ஓய்விற்காக வெளிநாடு சென்று உள்ளார். மேலும், அங்கேயே அவர் ‘மயோசிடிஸ் சிகிச்சை எடுக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.