தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு முரளி மகன் அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாகி நடித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார். விஜய், விக்ரம், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
கடந்த வருடம் திரைக்கு வந்த யுடர்ன், இரும்புத்திரை படங்கள் நல்ல வசூல் பார்த்தன. பொதுவாக திருமணத்துக்கு பிறகு நடிகைகளுக்கு அக்காள், அண்ணி வேடங்கள்தான் வரும். ஆனால் சமந்தாவை தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க அழைக்கின்றனர். கவர்ச்சி வேடங்களிலும் தாராளமாக நடிக்கிறார். தற்போது 96 படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடிக்க உள்ளார்.
அதே போல மன்மதடு-2 என்ற படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகியபோது இதுவரை ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய அவர் ரூ.3 கோடியாக உயர்த்தி கேட்டதாகவும் அந்த தொகையை கொடுத்து சமந்தாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.