உடலில் இருந்த பிரச்சனையால் மணிரத்னம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சமந்தா – பலரும் அறிந்திராத விஷயம்

0
215
- Advertisement -

இயக்குனர் மணிரத்தினம் படத்தை சமந்தா நிராகரித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் படு ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சமந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். மேலும், இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தா நடிக்கும் படங்கள்:

ஆனால், பிரிவிற்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள். அந்த வகையில் புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் சமந்தா. அதை தொடர்ந்து சமந்தா பல படங்களில் நடித்து இருந்தார். பின் சமந்தா தனக்கு Myositis என்னும் Autoimmune நோய் தன்னை தாக்கி இருந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்சனை காரணமாக சில படங்களில் இருந்து சமந்தா விலகியதாகவும் கூறி இருந்தார்.

சாகுந்தலம் படம்:

மேலும், சமீபத்தில் சமந்தா நடித்த யசோதா திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் போது தான் இவருக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால், அந்த வலியுடன் இந்த படத்திற்கான டப்பிங் பேசி முடித்தார் சமந்தா. தற்போது நடிகை சமந்தா சாகுந்தலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார்.

-விளம்பரம்-

மணிரத்னம் இயக்கிய படம்:

இந்த நிலையில் மணிரத்தினம் படத்தில் இருந்து சமந்தா விலகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மணிரத்தினம் படம் என்றாலே பல நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், அந்த வாய்ப்பை சமந்தா நிராகரித்திருக்கிறார். மணிரத்தினம் இயக்கத்தில் சமந்தா நடிக்க இருந்த திரைப்படம் கடல். இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தாவை தான் நடிக்க வைக்க மணிரத்தினம் முடிவு செய்திருந்தார். இதற்கான ப்ரொடக்ஷன் பணிகள் எல்லாம் தொடங்கியது.

படத்தில் இருந்து சமந்தா விலகிய காரணம்:

ஆனால், 2012 ஆம் ஆண்டு இந்த படத்தின் போது சமந்தாவிற்கு Polymorphic Light Eruption என்ற தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவரால் இந்த படத்தில் இருந்து அவர் வலுக்கட்டாயமாக நீக்கப்ட்டார். அதற்கு பிறகு தான் நடிகை ராதாவின் மகள் துளசி நாயர் நடித்தார். ஆரம்பத்தில் ஆடிஷனுக்கு எல்லாம் துளசி நாயர் சென்றிருந்தார். ஆனால், இயக்குனர் சமந்தாவை தான் முடிவு செய்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக பார்த்திபன் மகள் கிருத்திகா நடிக்க இருந்தார். இவரிடம் பேசும்போது, நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் உங்களிடம் துணை இயக்குனராக பணியாற்றுகிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement