திருமணத்திற்கு பின் தனது கணவருக்காக ஆசை ஆசையாய் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா. அதுவும் எந்த டாட்டூ தெரியுமா ?

0
1891
- Advertisement -

நாக சைதன்யாவின் பிரிவை மீண்டும் சமந்தா உறுதி செய்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

பின் சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த சாகுந்தலம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் சமந்தா மனம் உடைந்து போய் விட்டார். இதை அடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த குஷி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

குஷி படம்:

இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா, சரண்யா பொன்வண்ணன், லக்‌ஷ்மி, ரோஹினி, ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த சமந்தாவின் குஷி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

மயோசிடிஸ் நோய்:

இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனிடையே சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

சமந்தா விவாகரத்து:

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்குமே அதிர்ச்சியாக இருந்தது. பிரிவிற்கு பிறகு இருவருமே தங்களுடைய கேரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும், சமந்தா நாகசைதன்யா குறித்த சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் தான் இருக்கிறது. அந்த வகையில் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை பகிரும் வகையில் டாட்டூ போட்டு இருந்தார்கள். மேலும், சமந்தா தன்னுடைய முதுகில் ஒய்எம்சி என்ற தன்னுடைய முதல் படத்தின் டாட்டூவை போட்டிருந்தார்.

டாட்டூவை நீக்கிய சமந்தா:

அதற்குப்பின் தன்னுடைய விலா எலும்பு பகுதியில் chay என்ற பெயரை டாட்டூவாக போட்டு இருந்தார். பிரிவிற்கு பின்னும் சமந்தா அந்த டாட்டூவை நீக்காமல் இருந்தார். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா chay என்று தன்னுடைய உடலில் போட்டிருந்த டாட்டூவை நீக்கி இருக்கிறார். இதை சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படம் மூலம் உறுதி செய்து இருக்கிறார். இதன் மூலம் மீண்டும் சமந்தமா- நாக சைதன்யா சேர வாய்ப்பே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Advertisement