விவாகரத்துக்கு பின் சமந்தா நடிக்கும் முதல் லீட் ரோல், அதுவும் இப்படி ஒரு பிரம்மாண்ட படம். செட் மட்டும் இத்தனை கோடியா ?

0
537
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதனால் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம்.

- Advertisement -

சமந்தா நடிக்கும் படங்கள்:

இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சமந்தா நடிக்கும் பிரமாண்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது சமந்தா அவர்கள் சாகுந்தலம் என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வருகிறது. மேலும், இந்த படம் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

சாகுந்தலம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் சமந்தா பிரம்மிக்க வைக்கும் அழகில் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மயங்கி விட்டார்கள் என்றே கூறலாம். மேலும், இதுவரை கண்டிராத லுக்கில் சமந்தா இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர். சொல்லப்போனால் சமந்தாவும் இந்த படத்தின் ரிலீஸ் எதிர்பார்ப்பில் உள்ளார். தற்போது சோஷியல் மீடியாவில் சமந்தாவின் இந்த போஸ்டர் தான் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இதனை தொடர்ந்து சமந்தா அவர்கள் யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமந்தா நடிக்கும் சமந்தா:

யசோதா திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி- ஹரிஷ் இயக்குகிறார்கள். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட கதை. இந்த படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்காக 3 கோடி ரூபாய் செலவில் நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவலெங்கா கூறியிருப்பது, திரைப்படத்தின் கதை நட்சத்திர ஓட்டல் பின்னணியில் நடக்கிறது.

பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டலில் படப்பிடிப்பு:

இதற்காக பல்வேறு நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்றோம். ஆனால், தொடர்ச்சியாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு சிரமமாக இருப்பதால் தான் இந்த செட் அமைக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டலை கலை இயக்குனர் அசோக் தலைமையில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் விடுமுறையில் உள்ள நடிகை சமந்தா விரைவில் படப்பிடிப்பு திரும்ப உள்ளார். அவர் வந்தவுடன் இந்த பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார்.

Advertisement