நீண்ட நாட்களாக நீடித்து இருந்த சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்து இருந்தது. இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருந்தது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.
நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது.
இந்த சர்ச்சை முதன் முதலாக எழுந்த காரணம் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தன் பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி ‘ என்ற நாகர்ஜுனாவின் குடும்ப பெயரை நீக்கிவிட்டு தன் பெயரின் முதல் எழுத்தான வெறும் ‘S’ என்று மட்டும் வைத்து இருந்தார். அப்போதில் இருந்தே சமந்தா விவகாரத்து சர்ச்சை வைரலானது. இப்படி ஒரு நிலையில் கடந்த 2 ஆம் தேதி இவர்கள் இருவருமே தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.
திருமணத்திற்கு பின்னர் சமந்தா தொடர்ந்து நடித்து வந்ததாலும் பெமலி மேன் தொடரில் கவர்ச்சியாக நடித்ததாலும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் விவாகரத்துக்கு பின்னர் சமந்தா, Evaru Meelo Koteeswarulu (உங்களில் யார் கோடீஸ்வரன்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.
விவாகரத்து பின்னர் சமந்தா பங்குபெறும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் NTR தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டார், அப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது சமந்தாவின் மாமனாரான நாகர்ஜுனா தான். அதே போல அப்போது சமந்தாவிற்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.