நாக சைதன்யாவை Unfollow செய்துவிட்டு சமந்தா போட்ட Story – ஆனா, இப்படி சொன்னது அவர் அம்மாவாம்.

0
523
nagachaitanya
- Advertisement -

நடிகை சமந்தாவின் சமீபத்திய செயல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-
samantha

பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

- Advertisement -

விவாகரத்துக்கு பின் சமந்தா :

பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். விவாகரத்துக்கு பின்னர் அடிக்கடி விவாகரத்து பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சமந்தா.

திருமண புடவையை திருப்பி கொடுத்த சமந்தா :

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தா தான் திருமணத்தின் போது கட்டி இருந்த புடவையை நாக சைதன்யாவின் அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இதன் மூலம் நாக சைதன்யாவிற்கும் தனக்கும் ஒட்டு உறவே இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் சமந்தா. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் விவாகரத்து பற்றிய அறிவிப்பை நீக்கி இருந்தார். . இதனை அடுத்து அவர் மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைவாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர்.

-விளம்பரம்-

நாக சைத்தாயாவை Unfollow செய்த சமந்தா :

இப்படி ஒரு நிலையில் நாகசைதன்யாவின் சமூக வலைதள பக்கங்களில் Unfollow செய்துள்ளார் சமந்தா. அதுமட்டுமல்லாமல் Unfollow செய்த பின்னர் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் ‘சில நேரங்களில் நமக்குள் இருக்கும் பலம் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் கொழுந்து போல இருக்காது. சில நேரங்களில் அது ஒரு சிறிய பொறியாக மிக மிக மென்மையாக இரகசியமா இருக்கும் என்று என் அம்மா சொன்னார்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement