தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் நடித்த சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.
இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ ,’மஜிலி’போன்ற படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா.
சமீபத்தில் இவர் ஒரு குர்குரே விளம்பரத்தில் நடித்திருந்தார். மேலும், அவர் சமீபத்தில் அவர் பதிவிட்ட டீவீட்டில், குர்கூருடன் கூட்டுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் 20 வது ஆண்டுவிழா கொண்டாட, குர்கூர் ஒரு சிறிய ஆச்சரியம் உள்ளது, மேம்படுத்தப்பட்ட Kurkure Masala Munch Gingelly எண்ணெய். நீங்கள் இந்த புதிய chatpata ருசியை இருந்து நேசிப்பீர்கள் என்று நம்புகிறேன்! என்று பதிவிட்டிருந்தார்.
இந்த டீவீட்டை கண்ட ட்விட்டர் ரசிகை ஒருவர், இந்த நடிகைகள் மற்றும் ஆரோக்யமான சாலடுகள் மற்றும் ஆரோக்கியமானஉணவை தான் சாப்பிடுகின்றன. ஆனால் எங்களுக்கு ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிட ஊக்குவிக்கின்றனர் என்று கமன்ட் அடித்தார்.
அதற்கு ஆமாம், நான் செய்தேன்.நான் ஞாயிறு கிழமை சாப்பிடும் ஒரு புகைப்படத்தை அனுப்புகிறேன்.நான் தினமும் இதுபோன்ற உணவை சாப்பிடுவதில்லை. சிற்றுண்டிகளை மற்ற சாதாரண நபர் போலவே விரும்புகிறேன். என்று பதிலளித்துள்ளார். தற்போது இந்த விடயம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.