தெலுங்கு எவ்வளவோ மேல் , மஞ்சுமெல் பாய்ஸ் ஓடுது, என் படத்துக்கு நாதி இல்ல – சமுத்திரக்கனியின் ஆவேச பேட்டி

0
173
- Advertisement -

இந்த காரணத்தினால் தான் நான் படம் இயக்குவதில்லை என்று சமுத்திரக்கனி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமுத்திரகனி. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தில் வெங்கட் பிரபு, எஸ் பி பி சரண் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அதை அடுத்து இவர் விஜயகாந்தை வைத்து நிறைந்த மனசு, சசிகுமாரின் நாடோடிகள், போராளி, ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் நடிகராகவும் மாறினார்.

- Advertisement -

சமுத்திரக்கனி திரைப்பயணம்:

அதைத்தொடர்ந்து இவர் ஈசன், சாட்டை, நீர் பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன், விசாரணை, காலா, வடசென்னை, ஆர்ஆர்ஆர், துணிவு, தலைக்கூத்தல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சைரன் என்ற படத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இதை அடுத்து இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் யாவரும் வல்லவரே.

யாவரும் வல்லவரே படம்:

இந்த படத்தை ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். நாளை இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக youtube சேனல் ஒன்றுக்கு சமுத்திரக்கனி பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவரிடம் ஏன் சமீப காலமாக படங்களை இயக்குவது இல்லை என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கு சமுத்திரக்கனி, அப்பா படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்யபோது நான் போராடிய கஷ்டம் எனக்கு தான் தெரியும். தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் உருவாக்கும் படங்களை பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்களா, இல்லையோ ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம் .

-விளம்பரம்-

மஞ்சுமேல் பாய்ஸ் படம் குறித்து சொன்னது:

மலையாளத்தில் வெளியான சிறு பட்ஜெட் படமான மஞ்சுமேல் பாய்ஸ் படம் இங்கே ஓடுகிறது. ஆனால், என்னுடைய படத்தை கூட வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. அந்த காரணத்தினால் தான் நான் இயக்குவதை விட்டுவிட்டேன். யார் நடிக்க கூப்பிடுகிறார்களோ போய் அந்த படத்தில் நடித்துவிட்டு வருகிறேன். மேலும், மஞ்சுமேல் பாய்ஸ் படத்தை என்னுடைய மகனே நான்கு முறை பார்த்து விட்டான். மலையாளத்தில் வசூலிப்பதை விட தமிழ்நாட்டில் தான் இந்த படம் அதிகளவு வசூல் செய்து வருகிறது.

மஞ்சுமேல் பாய்ஸ் படம்:

இதே போல் தமிழ் சினிமாவில் வெளியாகும் சிறு படங்களை ரசிகர் கொண்டாடினால் பல நல்ல கதைகள் சினிமாவிற்கு வரும். அதுமட்டுமில்லாமல் மோகன்லால் மகன் படம் அடுத்து வர இருக்கிறது. அந்தப் படத்தை தியேட்டர்கள் வாங்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், யாவரும் வல்லவரே படம் வியாபாரம் ஆகவில்லை என்று கூறியிருக்கிறார். இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கிய இந்த படம் கடந்த மாதம் 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் செளபின் சாஹிர், படத்தை பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Advertisement