பெரிய மனுஷன் சிவகுமார், ஏன் கார்த்தி இப்படி – அமீர்,ஞானவேல் விவகாரத்தில் சமுத்திரக்கனி அறிக்கை

0
425
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் அமீர்-ஞானவேல் ராஜா சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஜப்பான் படத்தின் விழாவில் கார்த்தியை வைத்து படம் இயக்கிய பல இயக்குனர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அமீர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பேட்டியில் அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை. பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார். அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை. இப்படி இயக்குனர் அமீர் அளித்திருந்த பேட்டி கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் படத்தை நானாக தயாரிக்கவில்லை. அதுவும் அமீருக்காக தான். அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார். சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். அப்போது அமீர் பருத்திவீரன் எடுத்த பட்ஜெட்டில் 4 படங்களை தயாரித்திருக்கலாம். இப்போதும் அவர் சொன்னால் எத்தனை பேர் முன்னிலையிலும் பருத்திவீரன் பிரச்சனை குறித்து நான் பேச தயார். அவருக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது.

- Advertisement -

அமீர் குறித்து சொன்னது:

இனி அமீர் இந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டே இருந்தால் நானும் விடமாட்டேன் பதிலடி கொடுப்பேன். என்னை மட்டும் இல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அமீர் மோசடி செய்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து இயக்குனர் அமீர் மிக நீண்டமாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து பலரும் பவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பருத்திவீரன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், நடிகருமான சமுத்திரக்கனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், அமீர் அண்ணனை பற்றி நீங்க பேசின வீடியோவ இப்பதான் பார்த்தேன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ.தப்பு தப்பா பேசிருக்கீங்க. கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. ஏன் சொல்றேன்னா, அந்த படத்துல் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரைக்கும் இருந்தவன் நான்.

-விளம்பரம்-
SASI

எல்லா பிரச்சினையும் எனக்கு தெரியும். ஆறு மாசம் “பருத்திவீரன்’ படப்பிடிப்பிலே இருந்துருக்கேன். ஆனா, உங்கள ஒருநாள் கூட அங்க பாத்தது இல்ல. நான் தான் தயாரிப்பாளர். நான்தான் தயாரிப்பாளர்னு பேசிக்கிட்டே இருக்கிறீங்க. உங்கள தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்தியை ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன். எந்த நன்றி விசுவாசமும் இல்லாம் பேசி இருக்கிறீங்க பிரதர் தப்பில்லையா ? எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம். பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சினைகள் வரும்போதெல்லாம், சரி நமக்கெதுக்கு அவங்களே பேசிக்குவாங்க; அவங்களே தீத்துக்குவாங்க அப்படின்னு தான் நான் இருந்தேன். ஆனால், இந்த முறை அப்படி இருக்க முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அண்ணன் இந்த படத்துக்காக எவ்ளோ உழைச்சிருக்கார். எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கார் என்று எனக்கு தான் தெரியும். ஏன்னா, கால்வாசி படம் நடக்கும்போதே, நீங்க கைய விரிச்சிட்டீங்க. என்னால் தயாரிக்க முடியாது, பணம் இல்லை என்றும் படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர் அண்ணா என்று சொல்லிட்டு போய்ட்டார்.

அதுக்குப்பிறகு அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும் அமீர் அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள், இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் அவர் சொல்லச்சொல்ல போய் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், ரெண்டு வட்சம் இப்டி வாங்கிட்டு வந்தவன் நான். இது இல்லாம சசி கூட கொஞ்சம் பணம் கொடுத்திருக்கான் பிரதர் அந்த படத்துக்கு. almost அம்பது, அறுபது பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் அந்த படத்தை எடுத்து முடிச்சோம். ஆனால், கடைசியா நீங்க வந்து தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கிட்டிங்க. உண்மையிலேயே யார் தயாரிப்பாளர்? அமீர் தயாரிப்பாளர் பதவியை உங்களுக்காக விட்டுக்கொடுத்தார். அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும், என்ன வேணாலும் பேசியிருக்கலாம். ஆனால், களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறதத்தான் என்னால் இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல. ஒருநாள் அமீர் அண்ணனோட நண்பர் எழுத்தர். எதுக்கு இது?அப்டியே விட்டுவிட வேண்டியது தானே, நிறுத்த வேண்டியதுதானே என்று சொன்னார்.

அதுக்கு அமீர் அண்ணன் என்ன சொன்னாரு தெரியமா?ஆரம்பிச்சுட்டோம்,கார்த்தியோட எதிர்காலம் இது. அது மட்டும் இல்லாம, பெரியவர் என் கைய புடிச்சு என் கைல கொடுத்துட்டு சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் காதிலேயே இருக்கு. நான் இவங்களுக்காக ஏதும் செய்யலிங்க.. அந்த பெரிய மனுஷனுக்காகத்தான் செய்றேன். அப்படின்னு சொல்வி செஞ்சார். அன்னைக்கு அவரு படத்தை நிறுத்தி இருந்தால் இந்த படம் வந்துருக்குமா? ஒரு ஹீரோ வெளியில வந்திருப்பாரா? என்ன பேச்சு பேசுறீங்க? ஆனா அவ்வளவு தூரம்பெருந்தன்மையா நடந்துக்கிட்ட ஒரு மனுஷனைதான் எல்லாருமா சேர்ந்து அதுக்கு ஆயிரம் கோடி இல்ல, லட்சம் கோடி கொடுத்தாக்கூட ஈடாகாதுங்க. நீங்களெல்லாம் ஏதோ ஒண்ணரை கோடிக்கு கணக்கு கேட்டுட்டு இருக்கீங்க ஞானவேல்.செலவு பண்ணது அதுக்கும் மேல. அதெல்லாம் பாவம் கணக்கிலேயே இல்ல. அமீர் அண்ணனோட பணம் அது. இந்தமாறி பொதுவெளியில தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கோங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது என்று கூறி இருக்கிறார்.

Advertisement