20 ஆண்டுக்கு முன் சமுத்திரகனியின் சினிமா ஆசையை நிறைவேற்றிய பாலச்சந்தர். முதல் காட்சியே விவேக்குடன் தான். எந்த படம் பாருங்க.

0
4700
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘உன்னைச் சரணடைந்தேன்’. இது தான் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதில் கதையின் மிக முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண், மீரா வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ‘புரட்சி கலைஞர்’ விஜய காந்தின் ‘நெறஞ்ச மனசு’, எம்.சசிக்குமாரின் ‘நாடோடிகள் 1 & 2, போராளி’, ‘ஜெயம்’ ரவியின் ‘நிமிர்ந்து நில்’ போன்ற சில படங்களை இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

ஒரு இயக்குநராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சமுத்திரக்கனி, அடுத்ததாக நடிகராக களமிறங்க முடிவெடுத்தார். அதன் பிறகு ‘சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை, நீர்ப் பறவை, வேலையில்லா பட்டதாரி என்று பல படங்களில் நடித்தார் சமுத்திரகனி. ஆனால், இவரை ஒரு நடிகராக அறிமுகம் செய்தது கே பாலச்சந்தர் தான்.

சமுத்திரக்கனி இயக்குநர் ஆவதற்கு முன்பு பாலச்சந்தர் இயக்கிய சில டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘ஜன்னல் – சில நிஜங்கள் சில நியாயங்கள்’, பொதிகை டிவியில் ஒளிபரப்பான ‘கடவுளுக்கு கோபம் வந்தது’, ராஜ் டிவியில் ஒளிபரப்பான ‘மர்ம தேசம், ரமணி vs ரமணி பார்ட் 2’ போன்ற டிவி சீரியல்களில் நடித்திருந்தார் சமுத்திரக்கனி.

-விளம்பரம்-

தொடர்ந்து பாலச்சந்தரின் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தார் சமுத்திரக்கனி. ஒருகட்டத்தில் பாலச்சந்தர் அவர்கள் ‘நீ சினிமாவில் நடிக்க முதலில் ஆசைப்பட்டாய் சரி, நானே உன்னை முதலில் திரைப்படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று 2001ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் விவேக் உடன் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு அமைத்துக் கொடுத்தார்.

Advertisement