நீச்சல் குளத்தில் செல்ஃபீ – நீச்சல் உடையில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை சொன்ன ரேணிகுண்டா பட நடிகை.

0
1131
sanjana
- Advertisement -

சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகும் சிலர் மக்கள் மத்தியில் விரைவில் பிரபலமடைந்து விடுவதில்லை. அதே போல துணை நடிகர்களாக அறிமுகமாகும் நடிகர்களுக்கு நல்ல கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த வகையில் தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் எளிதில் அடையாளம் காணப்படும் ஒரு நடிகையாக திகழ்ந்து வந்தார்.

-விளம்பரம்-
 நடிகை சஞ்சனா சிங் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரேணிகுண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இதில் நடித்த யாரும் சினிமாவில் ஜொலிக்கவில்லை. இருப்பினும் சஞ்சனா சிங்க் இந்த படத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்தும்வந்தார். ரேணிகுண்டா படத்திற்கு பின்னர் கோ மயங்கினேன் தயங்கினேன், அஞ்சான், மீகாமன், தனி ஒருவன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார்.

- Advertisement -

மும்பையை சேர்ந்த இவர், ஆரம்பகாலத்தில் மாடலிங் துறைக்கு முயற்சி செய்திருந்தார். பின்னர் அது நடக்காமல் போக சினிமாவில் நுழைந்தார். இதுவரை 16 படங்களில் நடித்துள்ளார் சஞ்சனா சன் தொலைக்காட்சியில் இவர் பங்கேற்ற கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.தமிழ் மற்றும் தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்துவரும் சஞ்சனாசிங் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற முயற்சியில் முதற்கட்டமாக ஆல்பம் ஒன்றை தயாரித்திருந்தார்.

 Photos : Twitter @SanjanaSingh_

சிங்கப்பூர், மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட இந்த ஆல்பம் புதுமையான வகையில் படமாக்கபட்டிருந்ததாக சஞ்சனா கூறினார். அதை தொடர்ந்து படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தார் சஞ்சனா.தயாரிப்பில் ஈடுபட்டதால் பல்வேறு பட வாய்ப்புகளை கூட நிராகரித்து இருக்கிறார். சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement