திருமணம் குறித்து சுவாரசியமான பதில் அளித்த ஸ்ருதிஹாசன் காதலர்- என்ன சொன்னாரு தெரியுமா?

0
451
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதில் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பு சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் . மேலும், 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Shruthi hasan

அதோடு இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. அதோடு ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே நடிகை சுருதி ஹாசன் அவர்கள் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து வந்தார். ஸ்ருதி ஹாசன் தன் காதலனை அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து கூட வைத்தார்.

- Advertisement -

சுருதி காதலிக்கும் நபர்:

அதுமட்டும் இல்லாமல் இருவரும் திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஸ்ருதி ஹாசன் அதனை மறுத்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். ஸ்ருதி ஹாசனை பிரிந்த மைக்கேல் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்தார். ஆனால், காதலை பிரிந்த சுருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ருதி ஹாசன் அடிக்கடி ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். பின் ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார்.

Shruthi Haasan About BreakUps | பிரேக் அப் குறித்து ஸ்ருதி

திருமணம் குறித்து சாந்தனு ஹசாரிக்கா அளித்து உள்ள பதில்:

அதோடு அவருடன் ஸ்ருதி ஹாசன் ஒன்றாக வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் சமீபத்தில் சென்ற புத்தாண்டு வரை அவருடன் தான் ஸ்ருதி கொண்டாடி இருந்தார். இப்படி ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர் மும்பையை சேர்ந்தவர். அதோடு இவர் பிரபல டூடுல் கலைஞர் ஆவார். இந்த நிலையில் திருமணம் குறித்து சாந்தனுவிடம் பயனர் ஒருவர் கேள்வி கேட்டபோது அவர் ஒரு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார். தற்போது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திருமணம் குறித்து சாந்தனு கூறி இருப்பது,

-விளம்பரம்-

கலையை பற்றி சாந்தனு கூறியது:

இப்போது தான் நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். கலை, இசை என பல வழிகளிலும் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஆடைகளை வடிவமைத்தல் போன்ற பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே இது எங்கள் இருவருக்கும் ஒரு ஆக்கபூர்வமான பயணமாகும். நாங்கள் இருவரும் படைப்பு குறித்து உரையாடுகிறோம். இது உண்மையில் ஊக்கம் அளிப்பதோடு முன்னோக்கி செல்ல உதவுகிறது. நான் எப்போதும் ஸ்ருதிஹசனால் ஈர்க்கப்பட்டதைப் போல, அவரும் என்னால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இது தான் எங்களுக்குள் இருக்கும் உறவு. நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே நடந்துகொள்கிறோம்.

திருமணத்தை பற்றி சாந்தனு கூறியது:

இதனால் வேடிக்கையான விஷயங்களோடு கலையும் இசையும் பற்றி உரையாடிக் கொள்ள முடிகிறது. இது ஆக்கபூர்வமான உரையாடலாக இருக்கிறது. இது படைப்பாற்றல் தருணம். திருமணத்தை விட இதை தான் நான் பெரிதாக நினைக்கிறேன் என்று சாந்தனு பதிலளித்துள்ளார். இப்படி இசை,கலை படைப்புகளை குறித்து சாந்தனு அளித்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. காதலை விட சிறந்த கலைஞர்களாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனும் சாந்தனுவிற்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த காதலும் திருமணத்தில் முடியாது என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement