‘நயன்தாராவின் குழந்தைகளுக்கு என் மடியில் வைத்துதான் காதுகுத்து’ – சிம்பு,நயன் பட நடிகர் நெகிழ்ச்சி.

0
1496
- Advertisement -

நயன்தாரா குழந்தைகளுக்கு நான் தான் தாய் மாமன் என்று சந்தானம் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார்

-விளம்பரம்-
santhanam

பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் நடிகர் சந்தானம், குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார் சந்தானம்.

- Advertisement -

சந்தானத்தின் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்தார். மேலும், இவர் கடந்த சில வாருடங்களாக ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

சந்தானம் நடிக்கும் படங்கள்:

பின் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான படம் குலு குலு. இந்த படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ . இப்படம் தெலுங்கு ரீமேக்காகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் டிடி ரிட்டன்ஸ். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், படத்தில் ராவத், மாசூம் சங்கர், டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனீஸ் காந்த், பெப்சி விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சந்தானம் அளித்த பேட்டி:

இந்த படம் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாவது பாகம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக சந்தனம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் நயன்தாரா குறித்து கூறியிருந்தது, வல்லவன் படத்தில் இருந்து எனக்கு நயன்தாராவை தெரியும். சினிமாவில் எனக்கு கிடைத்த ஒரு தங்கை என்று சொல்லலாம்.

நயன்தாரா குறித்து சொன்னது:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருந்த படத்தில் எனக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. ஆனால், ஏதோ சில காரணங்கள் அந்த படம் நின்று விட்டது. அதோடு அந்த படத்தின் கதை கேட்க விக்னேஷ் சிவன் வீட்டிற்கு சென்ற போது எனக்கு தடபுடலாக விருந்து வைத்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் குழந்தைகளுக்கு நான் தான் தாய் மாமன். என் மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும். நான் தாய்மாமன் சீர் செய்வேன் என்று அவர்களிடமே சொன்னதாக சந்தானம் கூறியிருக்கிறார்

Advertisement