பறை இசையுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம குத்தாட்டம் போட்ட சந்தோஷ் நாராயணன் – வாயை பிளந்த இயக்குனர்.

0
999
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பறை இசை என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது சந்தோஷ் நாராயணன் தான். பா ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அறிமுகமானார் அதன் பின்னர் சூதுகவ்வும் ஜிகர்தண்டா மெட்ராஸ் கபாலி காலா போன்ற பல்வேறு படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன் இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக அதில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெற்று விடும் அந்த பாட்டு மாபெரும் ஹிட் அடித்து விடுகிறது.

-விளம்பரம்-

அதே போல் இவர் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் சமீபத்தில் இவர் தனுசுக்கு இசையமைத்த இரண்டு படங்களின் இசையும் வேற லெவல். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்து இருந்தார். இந்த இரண்டு படங்களின் பாடல்களும் வேற லெவலில் ஹிட் அடித்தது. அதிலும் ஜமகமே தந்திரம் படத்தின் ரக்கிட்ட ரக்கிட்ட பாடலும் கர்ணன் படத்தின் கண்டா வர சொல்லுங்க பாடலும் மாபெரும் வெற்றியடைந்து.

- Advertisement -

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், சீயான் 60 படத்திற்கு இசையமைத்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்கிறார். மேலும் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சந்தோஷ் நாராயணன்  இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, சந்தோஷ் நாராயணன் நடுவில் குத்தாட்டம் போடுகிறார். இந்த வீடியோவை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் ‘ஆஹா…. பின்றிங்களே ஜி’ என கமெண்ட் செய்துள்ளார்.

சமீபத்தில் இவரது மகள் தீ பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் யூடுயூபில் மாபெரும் ஹிட் அடித்தது. இதுவரை பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த இந்த பாடல் இந்திய அளவில் பிரபலமடைந்து இருக்கிறது. ஆனால், தீ உண்மையில் சந்தோஷ் நாராயணனின் மகள் கிடையாது. அவரின் வளர்ப்பு மகள் தான். ஆம், சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாக்ஷி ஐயர், ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரின் முதல் கணவருக்கு பிறந்தவர் தான் தீ என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement