தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா. அந்த படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் தான் நடிகை சரண்யா மோகன். இவர் அதற்கு முன்பாகவே காதலுக்கு மரியாதையை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
கேரளாவில் பிறந்த இவரின் சகோதரி சுகன்யா ஒரு பாரத கலைஞர் மேலும் இவரும் ஒரு நடன கலைஞர்.இவரின் நடனத்தை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இவரை ‘அணையதி பருவம்’ என்ற படத்தில் அறிமுபடுத்தினார்.மேலும் அந்த படத்தின் ரீ மேக்காண விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
மேலும் வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திரிந்தார் பார்ப்பதற்கு இன்னமும் சின்ன பெண் போல இருப்பதால் இவருக்கு மலையாளத்திலும் சரி,தமிழிலும் சரி ஹீரோவயின் வாய்ப்பு கிட்டவில்லை.
2015 இல் தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மனாபன் என்ற ஒரு மகனும் பிறந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரண்டாவதாக பெண் குழந்தை. அந்த தகவலை அவரது கணவரே புகைப்படத்தை பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்