சரண்யாவை போனில் ஒரே வரியில் புரபோஸ் செய்து திருமணம் செய்த நடிகர் பொன்வண்ணன். இப்படி எந்த இயக்குனரும் கேட்டு இருக்க மாட்டாங்க.

0
852
saranya
- Advertisement -

நடிகை சரண்யாவிற்கு பொன்வண்ணன் ஒரே வரியில் ப்ரொபோஸ் செய்திருக்கும் காதல் கதை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் உலகநாயகன் கமலுக்கே ஜோடியாக நடித்தவர். நாயகன், அஞ்சலி என பல ஹிட் படங்களில் சரண்யா நடித்து இருக்கிறார். தற்போது அனைத்து படங்களிலும் அம்மா கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது உள்ள பெரும்பாலான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இவராக தான் இருக்கும். மேலும், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கியுள்ளார் சரண்யா பொன்வண்ணன். எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒருகல் ஒருகண்ணாடி, கொடி என பல படங்களில் அம்மாவாக நடித்து தன் அபார திறமையை நிரூபித்துள்ளார் சரண்யா. இவரது நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார். தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார் சரண்யா. படங்களில் நடித்துக்கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் 300 பேருக்கு பேஷன் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லி கொடுத்து வருகிறார். இதனிடையே இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், பல பேருக்கு நடிகை சரண்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது தெரியாது.

நடிகை சரண்யா, கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டார். நடிகர் ராஜசேகர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் கூட நடித்து இருந்தார். மேலும், நடிகர் ராஜசேகர் மற்றும் சரண்யா திருணம் ஆன ஓராண்டிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். கடந்த ஆண்டு தான் ராஜசேகர் காலமானர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் தான் சரண்யா அவர்கள் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

பொன்வண்ணன் கருத்தம்மா திரைப்படத்தில் தான் சரண்யாவை முதன்முதலாக சந்தித்திருந்தார். அந்த படத்தில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக தான் நடித்து இருந்தார்கள். இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், பொன்வண்ணன் அவர்கள் எனக்கு போன் செய்து உங்களுடைய கால்ஷீட் வேண்டும் என்று கேட்டார். நானும் எத்தனை நாட்கள் என்று கேட்டேன். அவர் 70 வருடத்திற்கு என்று கூறினார். உடனே எனக்கு ஷாக்காக இருந்தது.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டேன். பின்பு அவர் நான் உங்களை காதலிக்கிறேன் என்று நினைத்து கொள்ள வேண்டாம். உங்களுடன் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் கேட்டேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். இல்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார். நான் அவரிடம் யோசிக்கணும் என்று சொன்னேன். அதற்கு அவர் நன்றாக யோசித்து சொல்லுங்கள் என்று சொன்னார். அதற்கு பிறகு நான் என்னுடைய தந்தையிடம் அவர் சும்மாக விளையாடுகிறார். செட்டில் அவர் சிரித்தது கூட கிடையாது. அவர் ஏன் இப்படி பேசினார்? என தெரியவில்லை என்று கூறினேன். அதற்கு பிறகு எங்களுடைய திருமணம் நடந்தது என்று கூறியிருக்கிறார்.

Advertisement