அர்ஜுனா அர்ஜுனா பாட்டில் அந்த சீனை பரர்த்துவிட்டு என் மகன் கேட்ட கேள்வி – சரத் குமார் ஓபன் டாலக்

0
1394
Sarathkumar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு அரசியல் வாதியும் ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். அதுமட்டுமில்லாமல் இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவரும் ஆவார். இவர் ஆரம்பத்தில் படங்களில் எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தார். பின் சரத்குமார் படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் ஏய். இந்த படத்தை வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் சரத்குமார், நமீதா, வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இந்நிலையில் சரத்குமார் அவர்கள் ஏய் படத்தில் நடித்த அர்ஜுனா அர்ஜுனா பாட்டு குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,
நான் ஏய் படத்தில் நடித்த போது சுந்தரம் மாஸ்டர் தான் அர்ஜுனா அர்ஜுனா என்ற பாடலை இயக்கினார். அப்போ சுந்தரம் மாஸ்டர் ரொம்ப கஷ்டப்பட்டார். நான் அந்த நேரத்தில் இமேஜ் எல்லாம் பார்த்து தான் நடித்து வந்தேன். அப்போது அர்ஜுனா அர்ஜுனா பாடலில் நமீதா தொப்புளில் முத்தம் கொடுக்கற மாதிரியும், வாய்யில் இருந்து தண்ணிர் வர மாதிரி எல்லாம் காட்சி வரும்.

நான் இதெல்லாம் ஓவராக இருக்கு என்றும், எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு மாஸ்டர் என்றும் சொன்னேன். உடனே அவர் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். இது எல்லாம் படத்துக்கு நல்லா இருக்கும். மக்கள் என்ஜாய் பண்ணுவார்கள் என்று சொன்னார். அதனால் நான் நடித்தேன். ஆனால், இப்ப என் பையன் பார்த்து இது என்ன டாடி? என்று கேட்கிறான். இப்ப நினைத்தால் ஏன் நடித்தோம் என்று தோணுகிறது. இது தேவையா? என்று தோணும். அதோடுஅந்த பாட்டு வந்ததாலே நான் டிவியை ஆப் பண்ணிட சொல்லுவேன். பின் வேற பாட்டு பாருங்க என்று சொல்லி விடுவேன் என்று கூறினார். இப்படி இவர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement