முதல் மனைவியோடு விவகாரத்து, விவாகரத்து பெற்ற நம்பியார் மகளுடன் திருமணம் செய்து அவருடனும் விவகாரத்து – சரத்பாபு பற்றி அறிந்திராத தகவல்.

0
4447
- Advertisement -

சரத்பாபுவின் இழப்பு குறித்து அவருடைய இரண்டாவது மனைவியின் மகன் பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சரத்பாபு. இவர் 70களில் தொடங்கி 90களில் வரை தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் படங்களில் பணக்கார பையன், நண்பன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் சின்னத்திரை சீரியல் நடித்திருந்தார். இப்படி இவர் கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேலாக 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சரத் பாபு உடல்நிலை:

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி சரத் பாபு காலமானார். அவருக்கு வயது 71. இவரின் இறப்பிற்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நம்பியாரின் பேரன் தீபக் நம்பியார் சரத்பாபு குறித்து நெகிழ்ச்சுடன் பேசி இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நம்பியாரின் பேரன்:

நம்பியாரின் மகள் சினேகா. இவர் கேரளாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர் தான் தீபக் நம்பியார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்களிலேயே விவாகரத்து செய்து கொண்டார்கள். அதற்குப் பிறகு நடிகர் சரத்பாபுவுக்கும் சினேகாவுக்கும் திருமணம் நடந்தது. மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சரத்பாபு- சிநேகா தம்பதி கணவன் மனைவியாக வாழ்ந்து இருந்தார்கள். இந்த நிலையில் நடிகர் சரத்பாபு குறித்து தீபக் நம்பியார் கூறியது, திருமணத்திற்கு முன்பு ஒரு பெரிய தொகையையும், திருமணத்திற்கு தேவையான நகைப் புடவை எல்லாம் அவரே வாங்கி தந்தார்.

-விளம்பரம்-

சரத்பாபு குறித்து சொன்னது:

கல்யாணம் முடித்ததும் அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை என்னை அப்பான்னு கூப்பிடு என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல் அவர் என்னை மகனாக தான் பார்த்தார். என்னுடைய திருமணத்தின் போது சில பிரச்சனைகள் வந்தது. அந்த நேரத்திலும் எங்க அம்மாவும், சரத்பாபு சாரும் பட்ட கஷ்டங்கள் எனக்கு மட்டும்தான் தெரியும். ஒரு கட்டத்தில் சரத்பாபு சாருக்கும் அம்மாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. ஆனால், அதற்குப் பிறகும் அம்மாவை குறித்து அவர் நலம் விசாரிப்பார். அக்கறையாக தான் இருந்தார்.

சரத்பாபுவின் முதல் மனைவி:

என் மீதும் எப்பவும் அவர் பாசத்தோடு தான் இருந்தார். உண்மையிலுமே அவர் ரொம்ப தங்கமான மனிதர். உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அவரைப் பற்றி வெளியில் இருந்து யார் யாரோ என்னென்னவோ தவறான தகவல்களை பேசினது ரொம்ப கஷ்டமாக இருந்தது. மீடியாக்களும் சமூக வலைத்தளங்களிலும் அவசரப்பட்டு தப்பான தகவல்களை வெளியிட்டாங்க. ஆனால், அந்த சமயத்திலும் கடவுளே அப்பாவை காப்பாற்று என்று தான் நான் வேண்டினேன் என்று கூறியிருக்கிறார். மேலும், நடிகர் சரத்பாபுவின் முதல் மனைவி நடிகை ரமா பிரபா. இவருடன் சரத்பாபு 14 வருடங்கள் வாழ்ந்து சில பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement