இதன் உச்சகட்டமாக , கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு இவரும் அழைக்கப்பட்டிருந்தர். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பக்கத்தில் அமர்ந்தவாறு போட்டோக்கள் பரவியது. விஷயம் என்னவென்றால், அந்த கலைநிகழ்ச்சிக்கு 2 கோடி ரூபாய் ஸ்பான்சர் செய்துள்ளார் அருள்.
அடுத்தகட்டமாக படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் அருள். துணை இயக்குனர் ஒருவர் அவரை அணுகி ஒரு கதையை கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஹீரோயினாக நயன்தாராவை பேசலாம் என உள்ளார்களாம். இதனை கேட்ட நெட்டிசன்கள் மீண்டும் அருளை கலாய்க்க துவங்கியுள்ளனர்.




