விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெட்ரா சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் புகழ்பெற்றவர் சீரியல் நடிகை நந்தினி. சீரியல் மட்டுமில்லாது கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சமீபத்தில் சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை மைனாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியானது. மேலும், சமீபத்தில் இதனை மைனா கூட உறுதி செய்திருந்தார். நடிகர் லோகேஷ் சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் நடிகை மைனா ஏற்கனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மைனாவிற்கு ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே குடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கும் அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும், நந்தினி மற்றும் அவரது கணவர் கார்த்திக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் பல இருந்தது. இதன் உச்ச கட்டமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். மைனாவின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேசும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்து. மேலும், கார்த்திக் வீட்டார், மைனா தான் கார்த்திக்கின் தற்கொலைக்கு காரணம் என்று கூறி வந்தனர். அதே போல இந்த தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர். தற்கொலைக்கு முன்பாக கார்த்திக் எழுதிய கடிதத்தில் நந்தினியின் அப்பாதான் தற்கொலைக்குக் காரணம் என்று எழுதியிருந்தார். இதனால் நந்தினியும், அவரது தந்தையும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே, மைனாவின் கணவர் இறப்புக்கு மைனா தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவர் குறித்து பேசிய மைனா, என் கணவரால் நான் பிரபலம் ஆனதாக பேசிக்கொள்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. என்னால் தான் அவர் பிரபலம் ஆனார். இந்த விஷயம் தெரிந்தால் பேச வேண்டும் இல்லை என்றால் வாயை மூடி பேசாமல் இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார் மைனா. அதே போல சமீபத்தில் நடிகை மைனா மற்றும் கார்த்தியின் அம்மா பேசிய செல் போன் உரையாடல் ஒன்று வெளியாகி இருந்தது.
அதில் கார்த்தியின் அம்மா கூறுகையில் நந்தினி கார்த்திக்கை ஆண்மை இல்லாதவர் என்று கூறுகிறாள், அனால் திருமணத்திற்கு பிறகு இரண்டு முறை கற்பமானதாகவும் . ஆனால் தான் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி வருவதால் கற்பத்தை நந்தினி களைத்து விட்டதாக கூறியுள்ளார்.மேலும் நந்தினியும் கார்த்தியின் குடும்பத்தார் வேண்டுமென்றே என்மீது குற்றம்சாட்டுகிறர்கள் என்று அந்த செல்போன் உரையாடலில் பேசி இருந்தார். இந்த நிலையில் மைனாவிற்கு இரண்டாம் திருமணம் நடக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வியப்பாக பார்க்கப்படுகிறது. எது எப்படியோ ஊர் வாயை மூட முடியுமா. மைனா இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்தால் சரி தான்.