ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளராக தர்ஷினி கலந்து கொண்டிருக்கிறார். இவர் திண்டிவனம் அருகில் உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் நிகழ்ச்சியில் தர்ஷினி தான் இருக்கும் பகுதியை சுற்றி உள்ள சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். இது நடுவர்களை மட்டும் இல்லாமல் பார்ப்போரையும் கண்கலங்க வைத்திருந்தது. அதாவது, அம்மணம்பாக்கத்தில் தொடக்கப்பள்ளி மட்டும் தான் இருக்கிறது. அதற்கு மேலும் படிக்க வேண்டும் என்றால் எல்லோருமே 5 km நடந்து அனந்தமங்கலம் பகுதியில் இருக்கிற பள்ளிக்கு தான் போகணும். அதுவும் குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு பஸ் கூட கிடையாது. இதனால் தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று தான் பள்ளிக்கு செல்கிற அவல நிலைமை இருக்கிறது.
தர்ஷினி ஊர்:
இதை அறிந்து பலருமே வந்து விசாரித்து இருக்கிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், நிகழ்ச்சியில் கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்றதால் தான் இன்று இந்த மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்ற வாய்ப்புகள் அம்மணம்பாக்கத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்குமே கிடைக்கணும். எங்கள் ஊருக்கு பஸ் வசதி வேண்டும் என்று ரொம்ப எமோஷனலாக தர்ஷினி பேசியிருந்தார். உடனே நிகழ்ச்சியின் நடுவர், அம்மணம்பாக்கம் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். ஊரில் உள்ள அனைத்து பேருடைய வாழ்க்கையும் மாற வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார்கள்.
View this post on Instagram
தர்ஷினி தந்தை பேட்டி:
இப்படி இவர்கள் பேசி இருந்ததது தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது, இந்த இது தொடர்பாக அளித்த பேட்டியில் தர்ஷினியின் தந்தை ராஜ்குமார், நான் பம்பை அடிப்பவன். கோயில் திருவிழாக்கள் எல்லாம் பம்பை அடிப்பேன். அப்போது நாங்கள் பாடுவதை பார்த்து தான் தர்ஷினிக்கும் பாட ஆர்வம் வந்தது. ரொம்பவே அருமையாக தர்ஷினி சாமி பாடல்கள் எல்லாம் பாடுவார். தர்ஷினியின் திறமையை கவனித்த பள்ளி வாத்தியார் ஒருவர், மற்ற பள்ளிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக் கொண்டு போவார். அப்படித்தான் பல இடங்களில் தர்ஷினிக்கு பாட வாய்ப்பு கிடைத்தது.

கல்வி கற்க குழந்தைகள் நிலை:
இன்று தர்ஷினி சரிகமப நிகழ்ச்சியிலும் பாடுறார். தர்ஷினி படிக்கிற பள்ளி அனந்தமங்கலத்தில் இருக்கிறது. நிகழ்ச்சியில் பள்ளிக்கூடம் போக பஸ் வசதி இல்லை என்று பேசி இருந்தோம். எங்கள் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பள்ளிக்கூடம் இருக்கிறது. பிள்ளைகள் தினமும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து போயிட்டு திரும்ப நடந்து வருகிறார்கள். அனந்தமங்கலத்திற்கு பஸ் இருக்கு. ஆனால், அந்த பஸ் ஏற டவுன் போகணும். 30 குழந்தைகள் தினமும் எங்கள் ஊரில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு போகிறார்கள். ரொம்ப காலமாகவே எங்களுடைய பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள். இத்தனை வருடமாக எந்த ஒரு நடவடிக்கையும் யாருமே எடுக்கவில்லை.

தர்ஷினி தந்தை வைத்த கோரிக்கை:
சில வீடுகளில் டூவீலர் வைத்திருக்கிறார்கள் அதன் மூலமாக பிள்ளைகளை கொண்டு பள்ளியில் விடுகிறார்கள். எதுவுமே இல்லாதவங்களுடைய குழந்தைகளின் நிலைமை யோசித்துப் பாருங்கள்? குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கலாம். ஆனால், பிள்ளைகள் தனியாக அவ்வளவு தொலைவு போயிட்டு வருவது தினமும் பயமாக இருக்கிறது. இதை நான் என்னுடைய குழந்தைக்காக மட்டும் பேசவில்லை. தர்ஷினி பள்ளிக்கூடத்துக்கு போனதனால் தான் இன்று இந்த மேடையில் வந்து பாடுகிறார். பஸ் வசதி எங்க ஊரில் இருந்தால் மற்ற குழந்தைகளோட கல்வியுமே மாறும். பள்ளிக்கூடத்தை தாண்டி ஏதாவது ஒரு அவசரத்துக்கு போகணும் என்று நினைத்தாலுமே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இப்போ சில வருஷமாக மினி பஸ் விடுகிறார்கள். அந்த பஸ்ஸும் திண்டிவனத்தில் இருந்து தான் வரும். ஆனால், அதே பஸ் குழந்தைகள் படிக்கிற பள்ளிக்கூடம் இருக்கிற ஊருக்கு போகாது என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.






