என்ன ஆனார் இலங்கை பெண், சரிகமப நிகழ்ச்சியின் பைனல் போட்டியால் ரசிகர்கள் ஏமாற்றம்.

0
261
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் தான். இந்த நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்களை கடந்து தற்போது 3வது சீசன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் சீனியர் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 28 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் ஆசானியும் ஒருவர்.

- Advertisement -

இவர் இலங்கை கண்டி என்ற பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை தேயிலை தொழிலாளி. 150 வருடங்களுக்கு முன்னர் இராமேஸ்வரம் தான் இவர்களுடைய சொந்த ஊராக இருந்தது. அதற்குப்பின் இவர்கள் இலங்கை அகதிகளாக இடம் பெயர்ந்து விட்டார்கள். ஒரு தேயிலை தோட்டத்தில் பல வருடங்களாக இவர்களுடைய தலைமுறையே கொத்தடிமைகளாக வேலை செய்து வருகிறது.

சினிமா, டிவி என்று எதுவும் பார்க்காமல் எப்எம் ரேடியோவில் வரும் பாட்டை கேட்டு அசானி பாடப் பழகியவர். அவரின் திறமையை அறிந்த அவருடைய குடும்பத்தினர் அசானி பாடிய வீடியோவை சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பின் அசானியால் மெகா ஆடிஷனில் கலந்து கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் பணப்பற்றாக்குறை தான். இதை அறிந்த ஊர் மக்கள் , உறவினர்கள் என்று எல்லோரும் முடிந்த உதவிகளை செய்து அசானியை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அசானி கடல் கடந்து தமிழ்நாட்டை நம்பி வந்ததால் இவருக்கு ஒரு வாய்ப்பை நடுவர்கள் கொடுத்திருக்கிறார்கள். தன்னுடைய இன்னிசை குரலால் அரங்கை அசாணி அதிர வைத்திருக்கிறார். மேலும், அசானி திறமையை கண்டு நடுவர்களே வியந்து போய் விட்டார்கள். பின் சோசியல் மீடியா முழுவதும் இலங்கை பெண் அசானி குறித்த செய்திகள் தான் அதிகமாக உலா வந்து கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது அசானி செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். அசானிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பைனலிஸ்ட் லிஸ்டில் அவரது பெயர் இடம்பெறவில்லை. 

  1. ரிக்ஷிதா ஜவஹர்
  2. கில்மிஷா
  3. சஞ்சனா
  4. ருத்ரேஷ் குமார்
  5. கனிஷ்கர்
  6. கவின்

என்று 6 பேர் இறுதிக்கட்ட நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளனர். இலங்கை பெண் கிஷ்மிகா பைனல் லிஸ்டில் இருந்தாலும் அசானி இல்லையே என்பது ரசிகர்களின் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஆசானியை வெறும் Trp காக மட்டும் பயன்படுத்தி கொண்டீர்களா என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement