Li’l Champsல் மாரி செல்வராஜ் பட பாடலை பாடிய இலங்கை சிறுமி – கண்ணீரில் மூழ்கிய நடுவர்கள் மற்றும் கெஸ்ட் சினேகன்.

0
1907
Saregama
- Advertisement -

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் பாடிய பாடலை கேட்டு சினேகன் அழுதிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 28 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி:

பின் இதுவரை 5 பேர் வெளியேறி, தற்போது 23 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அசானி என்ற பெண் இலங்கையில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார். இந்த வாரம் நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். மேலும், இந்த வாரம் டெடிகேஷன் சுற்று நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் தாங்கள் பாடும் பாடலை யாருக்கு டெடிகேஷன் செய்யப் போகிறார்கள் என்பதை கூற வேண்டும்.

இந்த நிலையில் இலங்கை பெண் கில்மிசா தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்தில் இடம்பெற்ற கண்டா வர சொல்லுங்க என்ற பாடலை பாடியிருக்கிறார். இதை அவருடைய மாமாவுக்கு டெடிகேட் செய்வதாகவும் கூடியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் ஈழத்து போரில் உயிர் இழந்திருக்கிறார். அதற்காகத்தான் இவர் இந்த பாடலை பாடியிருக்கிறார். இப்படி கில்மிசா கூறியதை கேட்டு நிகழ்ச்சியில் இருந்த அத்தனை பேரும் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்களுடன் கவிஞர் சினேகன், சைந்தவி ஆகியோரும் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புரோமோ தான் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் தான் இந்த நிகழ்ச்சியில் பக்தி சுற்றி நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் பாடிய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அது மட்டும் இல்லாமல் கடந்த வாரம் கனிஷ்கர் பாடிய பாடலை கேட்டு பலருமே மெய்சிலிர்ந்து விட்டார்கள்.

பின் அவருடைய பெற்றோர்கள் சொன்ன கதையை கேட்டு நடுவராக இருக்கும் அபிராமி அவர்கள் முதன்முதலாக அன்பே சிவம் படத்திலிருந்து பாடலை பாடி அரங்கமே எமோஷஷனல் ஆக இருந்தது. இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வந்த சினேகன் அழுது இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படி வார வாரம் ஏதாவது ஒரு எமோஷனலை காண்பித்து மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பிரபலமாக இருக்கிறது.

Advertisement