ஜீ தமிழின் சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை நிகழ்ச்சி, சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கான்செப்டில் சீரியல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று தான் சிங்கர் நிகழ்ச்சி.
தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு வெள்ளி திரையில் பாட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலமாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் இருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியில் சரிகமப நிகழ்ச்சியும் ஒன்று.
சரிகமப சீசன் 4:
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. தொகுப்பாளினி அர்ச்சனா தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளில் ஒளிபரப்பட்டு வருகிறது. கடைசியாக ஜூனியருக்கான மூன்றாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்தது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக சென்றிருந்தது. இந்த முறை சீனியருக்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக், சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று இருந்தார்கள்.
சரிகமப சீசன் 4 டைட்டில் வின்னர்:
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சிகளை விறுவிறுப்பாக கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் உடைய கிராண்ட் பைனல் நேற்று நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாடகர், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்திருந்தார். மேலும், இந்த இறுதி சுற்றுக்கு ஆறு போட்டியாளர்கள் தேர்வாகியிருந்தார்கள். இவர்கள் ஆறு பேருமே சிறப்பாக பாடி இருந்தார்கள்.
டாப் 3 இடங்கள் லிஸ்ட்:
இறுதியில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மகிழன் தேர்வாகியிருக்கிறார். இவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இவரை தொடர்ந்து முதல் ரன்னராக அதாவது இரண்டாவது இடத்தை ஸ்வேதா பிடித்திருந்தார். இரண்டாவது ரன்னராக ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டி பிடித்து இருந்தார். இது மட்டுமில்லாமல் மக்களுடைய தேர்வின் அடிப்படையில் நான்காவது இடத்தை சரண் பிடித்து இருந்தார். இவர்களுக்கு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.