சர்கார் படத்தால் கிடைத்த நிவாரண நிதி..!எத்தனை லட்சம் தெரியுமா..!

0
677
sarkargaja
- Advertisement -

தமிழகத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் திரைப் பிரபலங்களும் டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விஜய் தனது நற்பணி மன்றம் சார்பாக 7 மாவட்டங்களுக்கு 4 முதல் 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தின் ஒரு நாள் வசூலை கஜா புயல் நிவாரண நிதிக்கு அளிப்பதாக சர்க்கார் படத்தின் அமெரிக்க உரிமையை வாங்கியுள்ள ஏ அண்ட் பி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த தொகை சுமார் 6 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement