நடிகர் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் கதை என்னவென்றும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
இந்த படம் ஒரு அரசியல் சம்மந்தபட்ட கதைக்களத்தை கொண்ட ஒரு படம் என்று ஏற்கனவே பல்வேறு வந்த பல்வேறு தகவல்கள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து வருகிறாராம்.
வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருந்து வரும் விஜய் தமிழ் நாட்டில் நடக்கும் தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு செல்கிறார். ஆனால், அப்போது விமானம் தாமதமாவதால் சொந்த ஊருக்கு செல்ல கால தாமதமாகிவிடுகிறது.
அதனால், சொந்த ஊருக்கு செல்வதற்குள் அவருடைய வாக்கினை சில அரசியல் கட்சியினர் கள்ள ஒட்டாக பதிவிட்டிருப்பது விஜய்க்கு தெரியவருகிறது, இதனை என்னவென்று விசாரிக்கும் போது அரசியல் கட்சியினருக்கும், நடிகர் விஜய்க்கும் பிரச்சனை ஏற்பட, அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய்.
பின்னர் அரசியலில் குதித்து சில அரசியல்வாதிகளை எதிர்த்து மக்களுக்கு நல்லது செய்கிறார் விஜய். இந்த படத்தில் அரசியல்வாதியாக ராதாரவி நடிக்கிறார். அவரை எதிர்த்து தான் நடிகர் விஜய் அரசியலில் பல்வேறு புரட்சிகளையும் செய்கிறார். ஆனால், ராதாரவியை விட இந்த படத்தில் மெயின் வில்லனும் இருக்கிறார். அவர் யார் என்பது தான் சஸ்பென்சாகவே இருந்து வருகிறது.