நடிகர் தனுசை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
‘மறு வார்த்தை பேசாதே’ என்னும் ஒரு பாடல் படத்திற்கு பெரும் விளம்பரத்தை தேடித் தந்துள்ளது. மேலும் எப்போதும் லோக்கலாக நடிக்கும் தனுஷ் தற்போது மீசையை ஷேவ் செய்து, இளம் வயது பையனாக நடிக்கிறார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களே எதிர்பார்க்கும் படமாக மாறிவிட்டது.தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சசிகுமாரை நடிக்க வைப்பதாக உள்ளனர் படக்குக்குழுவினர். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இது ஒரு கெஸ்ட் ரோலாக இருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் படத்தின் முக்கியமான கதைக்கான சூட்டிங் நடந்து முடிந்து தற்போது இறுதிகட்ட சூட்டிங் நடந்து வருகிறது.