-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

என் போட்டோவை உங்க அம்மாகிட்ட காட்டு அவங்க சொல்வாங்க – சீரியல் நிர்வாகியிடம் எகிறியுள்ள சத்யா சீரியல் நடிகை (அப்படி என்ன அவர் கேட்டுள்ளார் பாருங்க)

0
1030
julie

சின்னத்திரை சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜூலி. இவர் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரை சீரியலில் வாய்ப்பு கிடைத்திருந்தது. பின் இவர் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் டான்ஸ் வரும் ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார். அதை தொடர்ந்து சீரியலில் பிசியாக நடித்து இருந்தார் ஜூலி. பின் திடீரென்று சில ஆண்டுகள் ஜூலி காணாமல் சென்று விட்டார். சமீபத்தில் தான் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சத்யா, சத்யா சித்திரம் பேசுதடி என்ற சீரியல்களில் கமிட்டாகி நடித்து வந்தார் ஜூலி.

-விளம்பரம்-

ஆனால், திடீரென்று யார் கண் பட்டதோ இந்த இரு சீரியல்களும் முடிந்துவிட்டது. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் ஜூலி இடம் பேட்டி எடுக்கப்பட்டு இருந்தது. அதில் அவர் தன்னுடைய சின்னத்திரை பயணம் குறித்து கூறியிருப்பது, தற்போது சத்யா சீரியல் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. சித்திரம் பேசுதடி தொடரும் முடிந்துவிட்டது. அடுத்து என்ன என்கிற கேள்வி? தான் என் முன்னாடி வருகிறது. அதே நேரம் கொஞ்சம் பிரேக் எடுக்கலாம் என்ற ஐடியாவும் இருக்கு. நான் நடிக்கத் தொடங்கி 25 வருடம் ஆகிவிட்டது. இன்னைக்கும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இது சொல்வதே நான் ஒரு சாதனையாக பார்க்கிறேன்.

நடிகை ஜூலி அளித்த பேட்டி:

சீரியல் எல்லாம் நாங்க நடித்து இருந்த காலத்தில் இருந்த மாதிரி இப்போது இல்லை. இன்று நிறைய நிறைய மாறிவிட்டது. தமிழ் சீரியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதில்லை. இதனால் தான் பிரச்சனையே ஏற்படுகிறது. இன்னொருபக்கம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யணும் என்ற பிரச்சனையும் இருக்கிறது. சினிமாவை விட டிவியில் இப்ப இது ரொம்ப வழக்கமாக மாறிவிட்டது. புதுசு புதுசா வரும் நடிகைகளிடம் இதைப் பண்ணினால் மட்டுமே நிறைய வாய்ப்பு கிடைக்கும், பிரபலமாகலாம் என்கிற அளவுக்கு மூளையை சலவை செய்கிறார்கள்.

தற்போது சீரியலின் நிலைமை:

-விளம்பரம்-

அதனால் சிலர் இதெல்லாம் தப்பில்லை என்கிற மாதிரி நினைத்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் வர நடிகைகளுக்கு நடிக்கவும் தெரிய மாட்டேங்குது. அட்ஜஸ்ட்மெண்ட் பண்றதுக்கு ஓகே சொல்லிட்டால் பிறகு நடிப்பு வந்தா என்ன வரலைன்னா என்கிற மாதிரியும் போய்க்கொண்டிருக்கின்றது. தற்போது சின்னத்திரை சீரியல் நிலைமை ரொம்ப மோசமாக தான் போயிட்டு இருக்கு. நான் ஏதோ பொறாமையில் புலம்புவதாக நினைக்க வேண்டாம். நான் 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களை புறந்தள்ளிவிட்டு 25 வருஷத்தை கடந்து வந்துவிட்டேன்.

-விளம்பரம்-

ஆர்டிஸ்ட்களிடம் நடந்து கொள்ளும் விதம்:

இதுவே என் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. சேனல்களுமே இன்னைக்கு மாறிவிட்டது. முன்னாடி எல்லாம் ஆர்ட்டிஸ்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. இன்னைக்கு சேனல்களுக்கும் ஆர்டிஸ்ட்களுக்கும் இடையில் மீடியேட்டர் ஆக சின்ன சின்ன பசங்க வருகிறார்கள். அவங்களுக்கு ஆர்ட்டிஸ்டுகள் இடம் எப்படி பேசணும்? என்பது கூட தெரியவில்லை. உதாரணத்திற்கு, ஒரு பிரபல சேனலைச் சேர்ந்த எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசர் ஒரு சீரியலுக்குக் கேக்கறப்ப என்கிட்ட, இதுக்கு முன்னாடி இந்த டிவி சீரியலில் நீங்கள் நடித்திருக்கிறார்களா? என்று கேட்கிறார்.

சீரியலில் இருந்து பிரேக் எடுக்க காரணம்:

எனக்கு கோபம் வந்துவிட்டது. என் போட்டோவை உங்க அம்மா கிட்ட காட்டுங்க, அவங்களுக்கு என்னை தெரிஞ்சிருந்தால் என்னை சீரியலில் கமிட் பண்ணுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று கோபமாக சொன்னேன். நடிகர் நடிகைகளை கமிட் செய்யறப்ப அவங்க யார்? என்னங்கிற விவரங்களைத் தெரிந்துகொண்டு கூட பேசுவதில்லை. இது ரொம்பவே வருத்தமாக இருக்கு. இந்த மாதிரியான சூழலை எதிர் கொண்டு கட்டாயம் நடிக்கணுமா? என்று நினைக்கத்தோன்றுது. அதனால் சில சமயம் மனது பிரேக்கை தேடுகிறது என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news