கங்குவா படத்தின் விமர்சனம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்து இருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதோடு கங்குவா படம் குறித்து சோசியல் மீடியாவில் பயங்கரமான நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
கங்குவா படம் குறித்த விமர்சனம்:
காரணமே இல்லாமல் சூர்யாவையும், படத்தையுமே மோசமாக விமர்சித்தும் திட்டி இருக்கிறார்கள்.
குறிப்பாக, கங்குவா படத்தின் நெகட்டிவ் விமர்சனத்தை விட சூர்யாவை தனிப்பட்ட முறையில் திட்டியவர்கள் தான் அதிகம். இருந்தாலுமே, படம் ஓரளவு வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் பட குழுவினருடன் சத்யராஜ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
கங்குவா பட விழாவில் சத்யராஜ்:
அப்போது விழாவில் நடிகர் சத்யராஜ், நல்ல படங்கள் ஓடுவதற்கு விமர்சனங்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதேசமயம் கட்டம் கட்டி உள்நோக்கத்துடன் தவறான நோக்கத்தில் கடுமையான விமர்சனங்களையும் செய்கிறார்கள். ஒரு படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவரை விமர்சனம் செய்யவோ, தாக்கி பேசவோ யாருக்குமே உரிமை கிடையாது.
விமர்சனங்கள் குறித்து சொன்னது:
படத்தில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே விமர்சனங்கள் செய்யுங்கள். அந்த படத்தையே காலி செய்யும் அளவிற்கு கடுமையான விமர்சனங்களை செய்யாதீர்கள். படத்தை விமர்சனம் செய்யும் மக்கள் படத்தினுடைய குறை, நிறைகளை சொல்லுங்கள். தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கி பேசி கடுமையாக விமர்சிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் சொன்னதற்கு காரணம் சூர்யாவை ரொம்ப மோசமாக தாக்கி இருக்கிறார்கள்.
கங்குவா கதைக்களம்:
படத்தில் 1070 மற்றும் 2024 என்று வெவ்வேறு காலகட்டத்தில் கதை நகர்கிறது. இரண்டு காலகட்டத்தையுமே மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு ஜூடா என்பவருடைய மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து கங்குவா கதை தொடங்குகிறது. அதில் பெருமாச்சி தீவின் நாயகனாக வலம் வருபவர் கங்குவா. கங்குவாவுக்கும் அவருடைய குழுவுக்கும் போர் செய்வது தான் குலத்தொழில். வீரமும் இயற்கை விளைந்த இந்த மண்ணை தன்னுடைய வசம் படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. அதற்கு பிறகு என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொள்ள துடிக்கும் கொடுவாவின் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.