கொலை மிரட்டல் வருகிறது என்று விஜய் சேதுபதியிடம் சொன்ன போது, அவர் இதை தான் சொன்னார் – சீனு ராமசாமி பேட்டி.

0
1040
seenu
- Advertisement -

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக இயக்குனர் சீனு ராமசாமிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு எதிரானவர் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பியது. அதுபோக தமிழ் சினிமாவில் இயக்குனர் சீனு ராமசாமி உட்பட பல இயக்குனர்களும் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

-விளம்பரம்-

தொடர்ந்து எதிர்ப்புகள் வந்ததால் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதாக அறிவித்து இருந்தார் இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக இயக்குனர் சீனு ராமசாமிக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறதாம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த சீனு ராமசாமி ”என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம் என்று பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர்’ எனக்கு அரசியல் சினிமா தெரிந்த அளவுக்கு சினிமா அரசியல் தெரியவில்லை. 

- Advertisement -

முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என எதிர்ப்புகள் உருவாகி வந்த சூழலில் நான் மிகவும் வேதனைப்பட்டேன். எனது கருத்துகளை விஜய் சேதுபதியிடம் தனிப்பட்ட முறையில் எடுத்துச் சொன்னேன். பொதுவெளியிலும் சொன்னேன். ஒரு பகுதி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ளக் கூடாது என்றும் விஜய் சேதுபதி நலனுக்காகவும் என் கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தினேன். ஆனால் விஜய் சேதுபதிக்கு எதிராக நான் உள்ளதாகச் செய்திகள் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன. 

800 பட விவகாரம் தொடர்பாக முரளிதரனின் அறிக்கையை வெளியிட்டு நன்றி வணக்கம் என்று கூறினார் விஜய் சேதுபதி. இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். ஆரம்பத்தில் படத்தின் கதை பிடித்துதான் நடிக்கச் சம்மதித்தேன். ஒரு நல்ல கதாபாத்திரம், உலகம் முழுக்கச் செல்லும் தன்மையுடையது என்பதால் தான் அதைத் தேர்வு செய்தேன். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது, அதில் அரசியல் விமர்சனங்கள் உள்ளது, தமிழர்களைப் புண்படுத்துவது போல உள்ளது என்று தெரிந்துகொண்டேன். இந்தச் சூழலில் என்ன செய்வது எனத் தெரியாமல் நான் நின்றுகொண்டிருந்தபோது, தயாரிப்பு நிறுவனமே இதைப் புரிந்துகொண்டு அவர்கள் விலகிப் போனார்கள். இதனால் நன்றி வணக்கம் என ட்வீட் செய்தேன் என விளக்கம் கொடுத்தார். பிறகு அவரை நான் நேரில் சந்தித்துப் பேசினேன். ஆனால் நான் ஏதோ விஜய் சேதுபதிக்கு எதிராகக் கருத்து கூறியதாக நள்ளிரவுகளில் வாட்சப்களில் எனக்கு அழைப்பு வந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து மெசேஜ் மூலமாகவும் என்னைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 

-விளம்பரம்-

நானும் எனது குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ள நிலையில் தொடர்ந்து எனக்கு அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் எனக்குப் பதற்றம் ஏற்பட்டது. அதைத் தெரியப்படுத்தவே ட்வீட் செய்தேன். கெட்ட வார்த்தைகளிலும் ஆபாச வார்த்தைகளிலும் பேசுகிறார்கள். எல்லோரையும் போல நானும் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை தான் வைத்தேன். இது தவறா? எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே பகையை உருவாக்கி சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளிக்கவுள்ளேன் என்றார். மேலும், இது குறித்து விஜய் சேதுபதியிடம் பேசியபோது “இதெல்லாம் மிகவும் சாதாரணம். கண்டுக்காதீங்க” என்று அவர் தெரிவித்ததாகவும் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement