படத்தில் இருந்து பெண்களை நீக்கினால் பாலியல் பழியா? – நடிகையின் குற்றச்சாட்டுக்கு சீனு ராமசாமி விளக்கம்.

0
194
- Advertisement -

இயக்குனர் சீனு ராமசாமி செய்த டார்ச்சலால் பிரபல நடிகை சினிமாவை விட்டு விலகி விட்டார் என்று பத்திரிகையாளர் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து சம்மந்தபட்ட நடிகையே விளக்கமளித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தன் மீது நடிகை வைத்த குற்றச்சாட்டுக்கு சீனுராமசாமி வேதனையுடன் விளக்கமளித்துள்ளார். சீனு ராமசாமி குறித்து பிரபல பத்திரிகையாளர் விமர்சித்து அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், இயக்குனர் சீனு ராமசாமி செய்த டார்ச்சரால் தான் நடிகை மனிஷா யாதவ் சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழில் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், அதற்கு பின்பு சீனுராமிசாமி இயக்கும் படத்தில் கொடுத்த டார்ச்சனால் மனிஷா யாதவ் விலகி விட்டார்.பல வருடங்களாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாமல் இருக்கும் படம் இடம் பொருள் ஏவல். இந்த படத்தில் மனிஷா முக்கிய கதாபாத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பின் போது மனிஷாக்கு சீனு ராமசாமி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

சொல்லவே முடியாத அளவிற்கு கொடுத்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடமும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த மனிஷா யாதவ் ‘சீனு ராமசாமியின் எந்த திரைப்படத்தில் நான் நடித்தேன் இதை முதல் முறையாக இப்போது தான் கேட்கிறேன். ஒரு குப்பை கதை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரும் இருந்தார் மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தது போல அவருக்கும் நான் நன்றி தெரிவித்தேன் அதனால் எதுவும் மாறிவிடாது நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விஷயத்தில் இருந்து மாறப்போகுது கிடையாது.

என்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் நான் ஏன் வேலை செய்ய வேண்டும். சீனு ராமசாமி சார் சொல்ற விஷயத்தை சரியாக சொல்லுங்கள்’ என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் ‘நான் அமைதியாக இருப்பதால் என்னை பற்றி சொல்லும் அனைத்தும் உண்மை என்று ஆகிவிடாது. ஏனெனில் விளக்கம் கொடுக்க நான் இருக்கிறேன்’ என்று கேப்ஷனையும் போட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து சீனு ராமசாமி தன்னுடைய விளக்கத்தை கொடுத்தள்ளார்.

-விளம்பரம்-

அதில் ‘

1) இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா,

2) படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?

3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ?

4) என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..? 

5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.

6) அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன். 

நவீன இலஷ்மி காந்தன் பிஸ்மி அவர்களுக்கு அண்ணன் பிஸ்மி ஒவ்வொரு நாள் தன் பேச்சை எனக்கு அனுப்புவார்.

ஒரு பூ வாட்ஸ்சப்பில் அவருக்கு போடுவேன் கடைசியில் மலர் அஞ்சலி எனக்கு வைக்க முயல்வார் என நான் எதிர் பார்க்கவில்லை.

மாமனிதன் பெற்ற விருதுகளை பிண அலங்காரம் என வசை பாடியது எனக்கு வலித்தது, மாமனிதன் உலகம் போற்றிய ஒரு சினிமா, அதனால் உங்களை ஒருமையில் எழுதி விட்டேன்.ஏன் கடந்த ஒன்னரை வருடமாக என்னை டார்க்கெட் செய்து வலை பேச்சில் 20 வீடியோ பேசினீர்கள் பிஸ்மி அண்ணா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலமாக பேசி பின் நானே அண்ணே என்னை நெகட்டிவா சொல்ல வேண்டாம் என கெஞ்சிய வாய்ஸ் நோட்ஸ் அனுப்பினேன் மூன்று மாதம் முன்பு.

ஆண்களை படத்தில் நீக்கினால் சிறந்த டைரக்டர், அதுவே பெண்களை நீக்கினால் பாலியல் பழியா? எங்கள் மனைவியார் என் வீட்டுக்கு புகைப்பட கலைஞரோடு வந்து என் அம்மாவை பேட்டி எடுத்தாங்க என்னையும் என் அம்மாவையும் இணைத்து படமும் எடுத்தாங்க அந்த பேட்டியை நன்றியோடு என்றும் நினைப்பேன்.அன்பன் சீனு ராமசாமி’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement